பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 * லா. ச. ராமாமிருதம் “எனக்கு என்ன தோன்றிற்றோ, தெரியவில்லை. அப் பொழுது வெறும் வேடிக்கை எண்ணம்தான் என்று நினைக் கிறேன். இரண்டு தாவில் கரையேறி, அவள் எதிரில் போய் வழியை மறித்துக்கொண்டு நின்றேன். இடுப்பில் ஈரமுண்டு; புடைத்த மாரிலும் புஜங்களிலும் ஜலம் துளித்து நின்றது. “தூக்கி வாரிப்போட்டாலும், யார் என்று கண்டதும் முகம் மலர்ந்தது. ஆனால் உடனே அடக்கிக்கொண்டு விட்டாள்.” “செளக்கியமா?” என்றேன். “செளக்கியந்தான். வழியை விடறையா?” என்றாள். "இத்தனை நாள் கழிச்சு இப்பத்தான் பார்க்கிறோம். அதற்குள் ஒடனுமா? “எனக்கு நேரமாச்சு: ஆத்தில் தேடுவாள்-” "நான் சிரித்துக்கொண்டே அவள் கையை உரமாய்ப் பிடித்தேன். அவள் உடல் வெடவெட'வென உதறிற்றுஆனால் பயத்தாலா? பிடித்த கையின் விரல்கள், பாதாளக் கொலுசின் கொக்கிகள்போல் வளைந்தண்- ஆனால் பயத்தாலா? பிரதிஷ்டையிலிருந்து நாகம் என் கையையும் என் பிடியில் அவள் கையையும் பார்த்துக்கொண்டிருந்தது.” 'உஷ்- என்னை விட்டுடுடா- விட்டுடுடா-” "நான் சிரித்தேன். உன்னை என்ன, கடிச்சு முழுங்கிடு வேனா? ஆமாம், முழுங்கிவிடப் போகிறேன்!” என்றேன். "ஐயோ! என் பேரைக் கெடுக்காதேடா என் குடியை அழிக்காதேடா- என்று உளறிக்கொண்டே, திமிறிக்கொண்டு ஓடினாள். கொஞ்சதுரம் போய்த் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் பயந்தான்; வெறுப்பு இல்லை. என் சிரிப்பு எதிரொலித்தது. மறுபடியும் ஓடினாள். அவள் ஒடுவது வெகு அழகாயிருந்தது. அதற்கப்புறம் அவள் வழிக்கு நான் போக வில்லை. ஆனால் அவள் தீர்மானமாய் என்னை ஒதுக்கினாள்.