பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ఫ ஜனனி శ్మీూ 5 அந்தப் பரமாணு வெளிப்படுகையில் அவள் வீரிட்டாள். “என்ன? என்ன?”- குளத்தண்டை காத்திருக்கும் ஆண்பிள்ளை, அலறிக்கொண்டே மரத்தண்டை ஓடி வந்தான். கொஞ்ச நாழிகை பேச்சு மூச்சில்லை. பிறகு திடீரென்று ஜலத்தில் கல்லை விட்டெறிந்தாற்போல், நள்ளிரவை ஒரு புதுக்குரல் கிழித்தது. அவனுக்கு உடல் புல்லரித்தது. "நான் வரட்டுமா?” “இல்லை; இல்லை- சரி, இப்போது வா!' அவன் இன்னமும் சற்று அருகில் வந்தான்; ஆனால் இருளில் ஒன்றும் தெரியவில்லை. “என்னா பிறந்திச்சு?" இருளில் அவள் குழந்தையைத் தடவிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்: “பொம்புள்ளையாட்டம் இருக்குது.” “அட கடவுளே!” பராசக்தி சிரித்தாள். ஆனால் மறுகணம் அவளுக்கு மூச்சுத் திணறியது. அவள் முகத்தின் மேல் ஒர் அழுக்குத் துணி விழுந்தது. குரல்வளையை இரு கட்டைவிரல்கள் அழுத்தின. மூச்சு பயங்கரமாய்த் திணறியது. அந்த எமப்பிடி யினின்று வீணே விடுவித்துக் கொள்ள முயன்றாள். “என்னம்மே, கொழந்தே-அடிப்பாவி! என்னா பண்றே?” “என்னெ சும்மா விடுன்னா!” - “அடி கொலைகாரி!” ‘விடுன்னா விடு-” குழந்தையை அவன் பிடுங்கிக் கொண்டான். "ராச்சஸி! உனக்குப்போய் மகமாயி கொளந்தையெக் குடுத்தாளே!”