பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாநிலம் சகித்திடுமோ பூமியில் தோன்றிய நாள் முதலாகப் புண்பட வாழ்ந்தோம்: புகலறி யோம்! ஏமாற்ற மும்துய ரமும்எமைச் சூழ்ந்தன இத்தனை காலமும் ஞாய முண்டோ ? மேனி தளர எலும்பு முறிந்திட மேடுகா டெங்கணும் ரத்த நீரால் தானியங் கள்மலை போல்விளை வித்தவர் தரணியி லேபசித் தழுதிட வோ? பாடுபட் டோர்பல வேறுமற்றார் மா பாவிகள் கொள்ளை மீறு தய்யோ ? கேடு கெட்டமுத லாளிகள் ஆட்சியில் கேள்விமுறை யில்லை போலும் அந்தோ! ஆணவ மும்திமி ரும்கொடுங் கோன்மையும் ஆஹு ஹுவென்று ஆர்ப்ப ரிக்க மானமுள்ள மக்கள் வாழ்வு சிதைந்திடில் மாநிலம் என்றும் சகித்திடு மோ?

160

160