பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ரமங்கள் சுக்குநூறாய் ஆக்கும் திண்ணம் கொண்டனம் அடிமைப்பேயும் அச்சப்பேயும் அலறிமாயக் கண்டனம் உக்ரமாய்ச்செஞ் சேனைவெள்ள மிக்கபோர்க்களத்திலே ஓட்டையாச்சு பூர்ஷுவாக்கள் கோட்டைகொத்த ளத்திலே செங்கொடிசெஞ் சேனைவாழ்க வாழ்கஎன்ற கோஷமே ஜெகமதிரக் கேட்பதாலே தோழரேசந் தோஷமே அங்குமிங்கும் உலகயுத்தம் கண்சிமிட்டும் இன்றுதான் அவனியில்பாட் டாளிமக்காள் ஐக்யமாவீர் நன்றுதான்!

63

63