பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

35



தட்டி எழுப்பினார்


தட்டி எழுப்ப வந்தார்- நம்மைத்
தட்டி எழுப்ப வந்தார் - ஐயா

தன்மான எண்ணத்தை வளர்க்க வந்தார்
-தட்டி


பட்டிகள் தொட்டிகள் பட்டண ஊர்களில்

மட்டிகள் போலினும் வாழ்ந்திடும் மாந்தரைத்
-தட்டி


கொண்டித் தொழுவத்தில் கட்டிய மாடெனக்
குப்பையில் மேய்கிற கோழிக ளாமெனச்
சண்டை யிடும்மதச் சாத்திரக் குப்பையில்

சாதியில் கட்டுண்டு சாய்ந்து கிடந்தோரைத்
-தட்டி


அண்டிப் பிழைத்தவர் ஆட்சி பிடித்தனர்
ஆட்சி புரிந்தவர் மாட்சி யிழந்தனர்
மண்டி யிடும்பல தொண்டு புரிந்தனர்

மாயையில் தூங்கினர் கண்கள் திறந்திடத்
-தட்டி

18-6-1979