பக்கம்:தந்தையின் காதலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்யப்பட்ட சவப் பெட்டிகளைப் போலத் தோன்றும் இரண்டு பாழடைந்த கட்டிடங்களும்தான் மணல் வெளியில் மிஞ்சி நின்றன. ஆனால் இவற்றையெல்லாம் அக்தச் சமுத்திர வெள்ளத்தோடு எண்ணிப் பார்க்கும்போது பொருளற்றதாகவும், அற்பமானதாகவுமே தோன்றின. இந்தப் பொருள்களை வானத்து நட்சத்திரங்கள் மங்கிய ஒளியோடு பார்த்துக்கொண்டிருந்தன.