பக்கம்:தந்தையும் மகளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தந்தையும்

அதுபோல் தான் அது சோறு வேகும் பாத்திரத்தையும் அழுத்துகிறது. அப்படிச் சாதாரணமாக அழுத்தும் நிலைமையில் தண்ணீர் 100° c டிக்கிரி உஷ்ண நிலையிலே கொதிக்க ஆரம்பிக்கிறது. அதைக் கொதிநிலை என் கூறுவார்கள்.

காற்றின் அழுத்துதல் கூடினால் கொதி நிலையும் கூடும். காற்றின் அழுத்துதல் குறைந்தால் கொதிநிலையும் குறையும். கொதிநிலை கூடுதல் என்பதன் பொருள் கொதி நீரில் அதிகமான உஷ்ணம் இருக்கிறது என்பதாகும். அது போல் கொதிநிலை குறைந்தால் கொதிநீரிலுள்ள உஷ்ணமும் குறைவாகவே இருக்கும். இதை நீ நினைவில் வைத்துக்கொள்.

அம்மா! சோறு ஆக்கும் போது முதலில் பானை திறந்திருக்கிறது. அதன் மீதுள்ள காற்றின் அமுக்கம் சாதாரண அளவு உள்ளது. தண்ணீர் கொதித்ததும பானையை மூடிவிடுகிறோம். அப்பொழுது காற்றின் அமுக்கம் கூடிவிடுகிறது. அதனால் பானையின் கொதி நிலையும் கூடிவிடுகிறது. அதனால் அதிகமான உஷ்ணம் உண்டாய்விடுகிறது. அதன் காரணமாகச் சோறு சீக்கிரமாக வெந்துவிடுகிறது. இதற்காகத்தான் நீர் கொதித்ததும் மூடிவிடுகிறார்கள்.

44அப்பா! சோறு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பில் எரியும் விறகைக் குறைத்து விடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து விறகை எரிக்கிறோம். தண்ணீர் சூடு ஏற ஏற உஷ்ணம் உடையதாக ஆகிறது. சிறிது நேரம் சென்ற பின் அதிக உஷ்ணம் சேர்ந்ததும் கொதிக்கத் தொடங்கி ஆவியாக மாறுகிறது. அதன்பின் மறுபடியும விறகு எரிப்பதால் நீரில் அதிகச் சூடு உண்டாவதில்லை. கொதிக்க ஆரம்பித்த பொழுது இருந்த 100°C டிக்கிரியே இருந்து