அமரர் கே.பி.நீலமணி
13
எனது கணவர் திரு. கே.பி.நீலமணி அவர்கள் எழுதிய "தந்தை பெரியார்" என்னும் வாழ்க்கை வரலாற்றுக் கையெழுத்துப் பிரதியை, அவர் அமரராகி ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘லியோ பதிப்பகம்’ மூலம் நூலாக வெளியிடுகிறேன்.
இந்த நூல் வெளியாவதற்குச் சிறந்த ஆலோசகராகவும், திரு. புலவர் அறிவுடைநம்பி அவர்கள் மூலம் அணிந்துரை எழுதி வாங்கி அளித்த அன்புள்ளம் கொண்ட, கலைமகள் பொறுப்பாசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கணவர் எழுதிய, ‘தந்தைப் பெரியார்’ என்ற வரலாற்று நூலுக்கு அணிந்துரை மூலம் அவருக்குப் பெரும் புகழாரம் சூட்டி பெருமையுடன் எழுதிய, திரு. புலவர் அறிவுடை நம்பி அவர்களுக்கு என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வறுமை நிலையில் இருக்கும் எனக்கு இந்த நூல் வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்து உதவி செய்த, பத்திரிகையாளரும் சிறந்த எழுத்தாளருமான திரு. திலீப்குமார் - அவர் மனைவி திருமதி அம்பிகா திலீப்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை சிறந்த முறையில் அச்சிட்டுத் தயாரித்து அளித்த திரு. ஆர்.வெங்கடாசலத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
லியோ பதிப்பகம்