பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

173



1940 - வடநாட்டுச் சுற்றுப் பயணம். பம்பாயில், ஜின்னா, அம்பேத்கர் முதலியோரைச் சந்தித்தார். கவர்னர் ஜெனரல், கவர்னர், இராஜாஜி ஆகியோர் வற்புறுத்தியும் அமைச்சரவைப் பதவியைப் புறக்கணித்தார்.

1942 - 'திராவிடாநாடு' பிரிவினைக் கொள்கையை எழுப்பினார்.

1943 - சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்படும் என்று உலகுக்கு அறிவித்தார் (Test Tube Baby).

1944 - நீதிக்கட்சி - திராவிடர் கழகமாக மாறியது (27.8.1944). கல்கத்தா 'ரேடிகல் டெமாக்ரடிக் கட்சி' மகாநாட்டில் கலந்து கொண்டார். கான்பூர் பார்ப்பனரல்லாத - பிற்படுத்தப்பட்டோர் மகாநாட்டில் கலந்து கொண்டார் (29, 30, 31-12-1944).

1947 - ஆகஸ்ட் 15 - துக்க நாள் என அறிவித்தார் (அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து.)

1948 - கட்டாய இந்தி எதிர்ப்பு மாநாடு நடத் தினார் (17.7.1948). திருக்குறள் மாநாடு நடத் தினார்.

1949 - மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார் (9.7.1949). உடுமலைப் பேட்டையில் தடை உத்தரவை மீறிச் சிறைப்பட்டார்.

1950 - குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார். 'பொன்மொழிகள்' - என்ற நூலுக்காக ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.