பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தந்தை பெரியார்



1952 - குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடினார்.

1953 - பிள்ளையார் சிலையை உடைத்தார். தொடர் ரயில் வண்டி நிலையங்களில் எழுதப்பட்டிருந்த இந்திப் பெயர்களை அழித்தார் (1.8.1953).

1954 - குலக்கல்வித்திட்ட எதிர்ப்பால், இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

1955 - இந்தித் திணிப்பை எதிர்த்துத் தேசியக்கொடியை எரிக்கத் தீர்மானித்தார் (1.8.1955). மத்திய, மாநில அரசுகள் - இந்தியைத் திணிப்பதில்லை என்று அறிவித்ததால், கொடி எரிப்புத் திட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்தார்.

1956 - இராமன் படத்தை எரித்தார். 'தட்சணப் பிரதேசம்' என்ற அமைப்பை எதிர்த்து, அரசைக் கைவிடச் செய்தார்.

1957 - திருச்சியில் வினோபாவைச் சந்தித்தார்.

சாதிக்குப் பாதுகாப்பாக உள்ள அரசியல் சட்டத்தை எரிக்கத்துண்டினார் (26.11.1 957).

1959 - வடநாட்டுச் சுற்றுப் பயணம். கான்பூர், இலக்னோ, டில்லி, பம்பாய் ஆகிய இடங்களில் குடியரசுக் கட்சியின் கூட்டங்களிலும், கல்லூரிகளிலும் பேசினார்.

1960 - தமிழ்நாடு பிரிவினை கோரி தமிழ்நாடு நீங்கிய தேசப்படத்தை எரித்தார்; கைதானார்.