பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தந்தை பெரியார்



தன் கடமைகளைத் தொடர்ந்து செய்து வெற்றி கண்டவர்.

யாரையும், எவரையும் துணை தேடாமல், மக்களை மனமாற்றம் செய்யும், தன் ஓயாத பேச்சையும், ஒய்வில்லாத எழுத்தையுமே நம்பி; அகிம்சா வழியில் போராடியவர் தந்தை பெரியார்.

என்றுமே மக்களைச் சந்திப்பதையும், மக்களோடு மக்களாய் பழகுவதையும், மக்களுக்காகவே மேடை தோறும் பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதையும்; அவர்களுடைய மேம்பாட்டிற்காகவே தொடர்ந்து எழுதுவதையும் இறுதிவரைத் தந்தை பெரியார் நிறுத்தவே இல்லை.

தந்தை பெரியாரது வருகை, திராவிட மக்களது இருண்ட வாழ்வில் தோன்றிய கறுப்புச் சூரியன், அவர்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டி புதுவழி காட்டிய பகுத்தறிவு சோதி!

நொந்து போயிருந்த திராவிடர் உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம் தந்தை பெரியார்.

இப்படித்தான் அபூர்வமாகச் சிலர் பிறக்கிறார்கள். அடிமை இந்தியாவின் விடுதலைக்கு அகிம்சா முறையில் வழிகாட்ட காந்திமகான் வந்தது போல -

நிறவெறி கொண்ட ஆங்கிலேயரிடமிருந்து, தனது கருப்பர் இனத்தை மீட்டு, அவர்களது அடிமை விலங்கறுக்க வந்த ஒரு மார்ட்டின் லூதர் கிங், போராடி வென்றதைப் போல -