பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

91


யடிக்கப்பட்ட வேதனையும் அவர் இமைகளை நனைத்தன.

தனக்கு ஏற்பட்ட அனுபவம் இனியாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக முழு நேரமும் பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த தடைக் கற்களாக இருக்கும் ஜாதி, மதம், சாத்திரம் இவற்றை அழிக்கும் வரை ஓய்வதில்லை என்று உறுதி கொண்டார்.

பிறரது துன்பத்தைப் போக்க இரவு பகல் பாராமல் உழைத்தார். அவருடைய சமுதாய சேவை அவருக்கு நகரசபை உறுப்பினர் பதவியைத் தேடித் தந்தது.

சுத்தமும், சுகாதாரமும் அற்றிருந்த ஊரைச் சீர் திருத்த அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கொடிய பிளேக் நோய் ஊர் முழுதும் பரவி, மக்கள் பலரை மடியச் செய்தது.

அந்நோய்க்கு அஞ்சி பலர் ஊரை விட்டு வெளியேறினார்கள். ஏழை மக்கள் எங்கு செல்ல முடியும்.

பிளேக் நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாயிற்று. பிணங்களை உடனுக்குடன் அகற்ற நகர சபையில் போதிய ஊழியர்கள் இல்லை.

இராமசாமி சுய கெளரவம் பாராது தன் உயிரையும் இலட்சியம் செய்யாது, விழும் பிணங்களை தோளில் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்கச் செய்தார்.

பிளேக் நோய் தொடர்ந்து பரவாமல் இருக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.