பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() வரை மறையவில்லை. ஆனால் தமது தம்பியாரின் கொள்கைகளைத் தாமும் ஏற்று, வைதிகப் பிடியி லிருந்து விடுபட்டு, இவரும் இறுதிவரை எல்லா நிலை களிலும் பெரியாருட்ன் ஒத்துழைத்து வந்தார். பெரிய நாயக்கர் என்றே அழைக்கப்பட்ட இவருக்கு, முதன் மனைவி நாகம்மாள் வாயிலாய்ப் பிறந்த மகன் ரங்க ராம், இங்கிலாந்தில் டாக்டர் சுப்பராயனுடன் கல்வி பயின்று வந்தவர் 20 வயதில் இறந்து போனார். தாயாரம்மாள் என்ற ஒரு மகள். பின்னர் இரண்டாவது மனைவியான ரங்கநாயகி அம்மாள் வாயிலாக மிராண்டா, சம்பத், செல்வராஜ், செல்லா, கஜராஜ் ஆகிய மூன்று ஆண், இரண்டு பெண் மக்கள் பிறந்தனர். திருப்பத்துார் வழக்கறிஞர் சாமிநாயுடு மகன் கஜேந் திரன் மிராண்டாவையும், மகள் சுலோச்சனா சம்பத் தையும் மணந்துகொண்டனர். இவர்கள் அனைவர்க்கும் மக்கட்செல்வம் நிரம்ப உள்ளது. இப்போது ஈ. வெ. கிருஷ்ணசாமி, ரங்கநாயகி அம்ம்ாள், ஈ. வெ. கி. சம்பத், ஈ. வெ. கி. கஜராஜ் ஆகியோர் உயிருடன் இல்லை. ஈ. வெ. கி. செல்வராஜ் நகரமன்றத் துணைத் தலைவராயிருந்தார். மூத்தபிள்ளைக்கு முற்றிலும் மாறுபட்ட குண நலன்கள் கொண்டவராய் இளைய பிள்ளை இராமசாமி விளங்கினார். இளமையிலேயே இவருக்குப் பெற்றோரின் கண்டிப்பும் கட்டுப்பாடும் நேரடியாய்க் கிட்டாமல் போயிற்று. காரணம், இவர் தனக்குப் பாட்டி முறையுள்ள ஒருவரிடம் செல்லப் பிள்ளையாக இளம்பருவத்தில் வளர்ந்து வந்தார். இராமசாமி பயில்வதற்காக அனுப்பப் பெற்றது ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம். அது சாமான்யக் குடிமக்கள்அதாவது-செக்கில் எண்ணெய் ஆட்டுவோர், கூடை முறம் முடைவோர், பீடி சுற்றுவோர் போன்ற அடித்தளத்தார்அதிலும் பல்வேறு சாதிமத அடிப்படையில் அழுத்திவைக்கப் பட்டோர்-வாழும் இடத்தில் அமைந்திருந்தது. ஆறாவது வயதில் அங்கு நுழைந்த இராமசாமி, மூன்றாண்டுகள் அந்தத் திண்ணைப்பள்ளியில் இருந்தார்; பயின்றார் என்று ச்ொல்ல முடியாது; குறும்புகள் புரிந்தார்; வரம்புகள் கடந்து சமுதாய சமத்துவ நெறி நின்றார்! ஆம்!