பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அன்புக்கும் பண்புக்கும் இருப்பிடமான நாகம்மை யாரைக் கொள்கைப் புடமிட்ட தங்கமாய்ப் பொலிவும் ஒளியும் பெறச் செய்த இராமசாமியின் இல்லற வாழ்வு: இனிதே ஆறாண்டு காலத்தைக் கடந்தது. இன்ப மனை மாட்சியின் மங்கலச் சின்னமாய் இரண்டாவது ஆண்டில் பிறந்த ஒர் பெண் மகவும் அய்ந்தே மாதங்களில் மறைந்து போயிற்று ! பின்னர் மகப்பேறு வாய்க்கப் பெறவில்லை இராமசாமி-தம்பதியர்க்கு! உலக மக்களினத்தையே தம் முக்களாய் ஏற்கவிருக்கும் பெருமகனுக்குத் தன்மகவு என ஒன்று உண்டா ? இளமையிலேயே இராமசாமி பொய்ம்மையை வெறுத்து விலக்கி, எத்தகைய இன்னல் எதிர்கொளினும் மெய்ம் மையை நிலைநாட்டவல்லார் என்பதும், வணிகராயினும், தேவையற்று யார்க்கும் திங்கு விளைத்திட நினையார் என்பதும் இனிது விளங்கிட, நல்ல நகைச்சுவை ததும்பும் நிகழ்ச்சி ஒன்றினை இங்கு நினைவு கூரலாம். 1903-ஆம் ஆண்டு, இவர் தந்தையார்க்கு உதவியாய், வணிகத் துறை யில் ஈடுபட்டிருந்தார்; வயது 24.திருச்சியில் ஒருவரிடமிருந்து வரவேண்டிய ஒராயிரம் ரூபாய்க்கான வழக்கிற்கு, வக்காலத்து நமூனாவில் தமது தந்தையார் பெயரைத் தாமே கையெழுத்துப் போட்டு, ஒரு வழக்கறிஞரிடம் கொடுத்து விட்டு, இவர் ஈரோடு திரும்பிவிட்டார். வழக் கறிஞர் ஆத்திரப் பட்டுத், தந்தை கையெழுத்தை மகன் ஃபோர்ஜரி செய்து, மோசடி செய்து விட்டதாக, ஒரு வழக்கைத் தொடுத்து விட்டார். தந்தை வெங்கட்ட நாயக்கர் பயந்து போய்த், தங்கள் பிரசித்தமான பெயருக்குக் களங்கம் விளையுமே என அஞ்சி, சேலம் விஜய ராகவாச்சாரியார், சென்னை நார்ட்டன் துரை போன்ற மிகப் பிரபல வழக்கறிஞர்களின் உதவி நாடினார். இராமசாமி, தான் இந்தக் கையெழுத்தைப் போட வில்லை என்று சொல்லி விட்டால், தப்பித்துக் கொள்ள லாம்; அது ஒன்றுதான் வழி; என்று அவர்கள் ஆலோசனை கூறினர். ஆனால் ஈ. வெ. இராமசாமி, பிடிவாதமாகப்