பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 முருகேச முதலியார் அலுவலகம் சென்ற பின், சந்நியாசிகள் மூவரும், பழைய தொழிலான அரிசிப்பிச்சை ஏற்க வெளியே கிளம்பி விடுவார்கள். சில நாள் திருடர்கள் ஒருநாள் முருகேசனாரிடம் சிக்கிக் கொண்டார்கள். அவர் மனம் வருந்தவே, இவர்கள் மனம் திருந்தினர். அங்கிருந்த ஏனைய தமிழர்களும் சேர்ந்து, பொருள்திரட்டி, இவர்களைக் காப்பாற்ற முன்வந்தனர். பலரும் இவர்களுக்குத் தனித் தனியே அழைப்பு விடுத்துத், தத்தம் வீடுகளில் கதாகாலட் சேபம் நிகழ்த்திட வேண்டினர். வடமொழிப் பண்டிதர் இராமாயண பாரதக் கதைகளை வடமொழி சுலோகங் களால் சொல்லித், தமிழிலும் விளக்கம் தருவார். தெலுங்கர் மிகுந்த ஊராகையால், அவற்றைத் தெலுங்கில் மொழி பெயர்த்து உரைக்கும்பணி, இராமசாமியிடம் வந்தது. இவர் தமது சுயமான கற்பனைகள், உவமைகள், சிறு கதைகள், விளக்கமொழிகள் ஆகியவற்றையும் இடையிடையே கலந்து, நகைச்சுவையும், கேலியும் கிண்டலும் விரவிட, ஒரு தனிச் சொற்பொழிவே நிகழ்த்தி விடுவார். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, மூவரையும் மிகவும் நேசித்தனர். அவர் களில் இராமசாமியாருக்கு ஏராள ரசிகசிகாமணிகள்! கட்டை கடைத்தேறக் காசிக்குச் சென்று தீரவேண்டு மென்று, மூன்று சந்நியாசிகளும் முடிவு செய்தனர். மக்களும் பிரியாவிடை தந்தனர்; தடுத்துப் பார்த்துப் பயனின்றிப் போனதால் செல்வச் செருக்கின் சின்னமாக அதுவரை இராமசாமியார் அணிந்திருந்த தங்க நகைகளான அரை ஞாண், மோதிரம், காப்பு, கொலுசு, கடுக்கண், சங்கிலி ஆகியவற்றைத், தம்மிடம் பாதுகாப்பாக விட்டுச் செல்லு மாறு, முருகேசனார் அறிவுரை கூறினார். அவரை தம்பலாமோ என்று முதலில் தயங்கினாலும் பிறகு தெளிந்து எல்லா நகைகளையும் ஒரு சிறு பெட்டியிலிட்டு, ஒரு பட்டிய ஆம் உள்ளிட்டுத், தந்து விட்டார். அவருக்குத் தெரியாமல், ஒரு மோதிரத்தை மட்டும் மறைவாகத் தம்மிடம் இருத்திக் கொண்டார். இவர் இன்னார் என்பது அவர்களில் யாருக்குமே தெரியாது!