பக்கம்:தந்தை பெரியார்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59 வெண்குலக் குரலோசை துணைசெய்யத் தமது ஒல்லி யான உருவத்துடன் தமிழகத்தில் அவர் முழங்காத சுய மரியாதை இயக்க மேடையில்லை. அண்ணாவுடன் திராவிட முன்னேற்றக் கழகங் கண்டவர். 21-2-45ல் பெற்ற வெற்றிச்செல்வி அம்மையாரின் வாழ்க்கைத் துணை நலம் இவருக்குப் பேருதவியாயிருந்தது. சிதம் பரம் கல்யாண சுந்தரனாரின் மூத்தமகனாகிய இவரைப் போலவே அடுத்த இளவல்களும் ஆசிரியர் களாயினும், இயக்கத்துடனேயே இணைந்த குடும்பத் தினராவர். சட்டமன்றப் பேரவை,சட்டமன்ற மேலவை, நாடாளுமன்றம் மூன்றிலும் உறுப்பினராகப் பணி யாற்றியுள்ளார். கலைஞரின் அமைச்சரவையில் நல் வாழ்வுத்துறையின் பொறுப்பிலிருந்தார். பின்னர் கழகம் சோதனைக்குள்ளான போழ்தில், தி.மு.க. பொதுச் செயலாளராகியுள்ளார். பேராசிரியர் என மக்கள் இவரை அன்பொழுக அழைக்கின்றனர். டார்ப்பிடோ சனார்த்தனம் தமிழ் தெலுங்கு ஆங் :கிலம் மும்மொழி வல்லுநர். எளிய தோற்றம், வெடிக்கு முன் எரிமலை, பெரியாரின் பெரு விருப்புக்குப் பாத்திரமானவர். சட்டமன்ற மேலவை, மாநிலங் களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்துள்ளார். தமிழ கத்தில் சுறுசுறுப்புடன் சுற்றிச் சுழன்று, விறுவிறுப்புடன் உரையாற்றி இவர் காணாத ஊரே இல்லை எனலாம். ஆங்கிலத்தில் பத்திரிகை, நூல்கள் எழுதியுள்ளார். சில காலம் தி. மு. கழகத்திலிருந்தார். இப்போது அ. இ. அ. தி. மு. க. எங்கிருந்தாலும் சுயமரியாதைக்கொள்ன்க களுக்கும், தந்தைபெரியாருக்கும் இவர் சிந்தையில் முதல் இடம்! பெரியசாமிப்புலவர், குழந்தையா, திருநாவுக்கரசு ஆகியோர் தொடர்ந்து சுயமரியாதைக் கருத்துகளைப் ப்ரப்பி வருவோர். பெரியசாமிப் புலவர் நல்ல பரம் பரையை உருவாக்கியவர், மறைந்து விட்டார். நா.மு. மாணிக்கம், செட்டிநாடு தந்த பகுத்தறிவுப் புலவர். பெருமைக்குரிய குடிஅரசு” அலுவலகத்தில் பெரியா ரிடம் பணியாற்றியவர். புலவர் நன்னன் சிலநாள் பெரியாரிடம் வதிந்தவர்; பகுத்தறிவுத் திறங்குன்றாப் பண்பாளர் பேராசிரியராகி, டாக்டர் பட்டமும் சுய முயற்சியால் பெற்றவர். - -