பக்கம்:தந்தை பெரியார்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 1949-ல் ஏற்காட்டிலிருந்து பெரியாரின் பிரதிநிதி யாகச் சென்னை விடுதலை’ அலுவலம் வந்தவர், அண்ணாவுடன் சேர்ந்து, கண்ணிர்த்துளியாகிவிட்டார். ஈரோடு வந்தவுடன், பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு, நேரே குன்னுரர் நகராட்சி ஆணையாள ராயிருந்த தன் தந்தை செந்தில் வேலாயுத நாடார் அவர்களிடம் போய்ச் சேர்ந்தார். ஆயினும் அய்யாவின் மெய்யன்பர். பெரியாரிடம் 'நீ என்று பேசத் துணி வுள்ள ஒரே மனிதர். கும்பகோணம் மாநாடு பெரியாரின் வாழ்த்துச் செய்தி க. அன்பழகனால் படிக்கப்பட்ட அளவோடு முடிந்தது மாணவ உலகுக்குப் பெருத்த ஏமாற்றம். அதனால் மார்ச் 15-ஆம் நாள் செல்வம் நினைவு நாள் பொதுக்கூட்டத்திலும்; பின்னர் பெரு முயற்சியால், ஏப்ரல் முதல் நாள், குடந்தை அரசினர் கல்லூரியிலும் பெரியார் கலந்துகொண்டு, அரிய வுரை நிகழ்த்துமாறு செய்து, மாணாக்கர் பெருமிதமும் பூரிப்பும் எய்தினர். கும்பகோணத்திலிருந்து ஈரோடு சென்றதும் பெரியார் புதுத்தென்பு கொண்டார். தம்மிடம் அப்போது தனிச் செயலராக இருந்த கஜேந்திரனை அழைத் தார். கல்லூரிகளுக்கெல்லாம் அனுப்பினார். எங்கெங்கு இயக்கப் பற்றுள்ள மாணவர்கள் உள்ளார்.எனக் கண்டறிந் தார். அனைவரையும் ஈரோடு வருமாறு அன்பழைப்பு விடுத்தார். அதிலே பெரு வெற்றியும் பெற்றார். வடார்க்காடு திருப்பத்துார் வழக்கறிஞர் சாமி நாயுடு, நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர். அவருடைய மூத்தமகன் கஜேந்திரன் மகள் சுலோ சனா. கஜேந்திரன் பி. ஏ. பட்டு பெற்ற பின்னர் பெரியாரிடம் அந்தரங்கச் செயலாளர் வந்து சேர்ந் தர் பின்னர் குடி அரசு”, “ஜஸ்டி:ை இதழ் களில் எழுதினார். 1945 மே 24-ஆம் நாள் பெi தலைமையில் ஈ. வெ. கிருஷ்ணசாம் ஆவர்களின் மூத்த மகள் மிராண்டா பி. ஏ. அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கஜேந்திரன் அரசு தலைமைச் செயலகத்தில் அலுவலரான்: மிராண்ட அம்மை யார் சென்னை மாநகராட்சிக் கல்வித்துறை அதிகாரி யானார். இவர்கட்கு இரு பெண் மதி: பெ.-11