பக்கம்:தந்தை பெரியார்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளா தாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் தேர்வு. சட்டக் கல்லூரியில் பி. எல். தேர்வு கடலூரில் கி. வீரமணி எம். ஏ. பி. எல். வழக்கறிஞ்ராகப் பதிவு, திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த போதும் பெரியாரைப் பிரியாத பேராண்மை, பெரியாரையும், திராவிட பாரம்பரியத்தின் வரலாற்றையும், சுயமரியாதை இயக்கத்தின் கோட்பாடு களையும் அய்யந்திரிபு இன்றி உணர்ந்தமையாலும், அபாரமான நினைவாற்றல்ாலும், கல்வியின் தேர்ச்சியா லும், பயிற்சியின் சிறப்பின்ாலும், சொல்லாட்சித் திறத்தாலும் மேடையிலே இவர் வெற்றிகரமான விரைவுப் பேச்சாளராக விள்ங்குகிறார். பூவாளுர் அ. பொன்னம்பலனார் கூட விரைவாகப் பேசுவார். ஆனால் சில பல சொற்கள் விளங்காமலே போகும். இ டி. வீரமணியின் விரைவான சொற்பெருக்கிலும் விளங் காத சொல்லடுக்கே விழுவதில்லை. அலங்கார நடை யல்ல. ஆனால் அழுத்தமான தெளிவான உறுதியான நடை, ஆழமான அனுபவமிக்க கருத்தோட்டம். எழுத்திலும் இவர் இணையற்ற வெற்றி கண்டுள்ளார். விடுதலை'யில் இவர் பொறுப்பேற்ற பிறகு எழுதப்பட்ட தலையங்கம், துணைத்தலையங்கம் எவையாயினும், வெளியிடப்பட்ட பெட்டிச் செய்திகள், துணுக்குகள், செய்திகள் எவையாயினும் பெரியாரின் அங்கீகாரம் பெற்றவை என்று நம்பல்ாம். ஏனெனில் எஸ். குருசாமியின் பொறுப்பில் விடுதலை’ நடந்த காலத்தில் பெரியாரின் எண்ணத்திற்கு முரணாக எத்தனையோ சங்கதிகள் வெளியானதுண்டு. с பெரியாரின் அனைத்து நற்பண்புகட்கும் உறைவிட மாய், அவர் தீர்மானித்த பெண்மணியை மணந்து, அளவான குடும்பமாய், இரு ஆண் ஒரு பெண் மக்க ளுடன், அவர் ஏற்றித் தந்த பகுத்தறிவுச் சுடரைப் பாதுகாப்பாய் பத்திரமாய் உயிரினும் மேலாகப் போற்றி வரும் இவர் ஒருவரே தன்மான இயக்கத்தின் நம்பிக்கைப் போரொளியாய் இன்று திகழ்கின்றார். பதவிச் சுகம் அனுபவித்தவர்களால் கம்மாயிருக்க யாதே! அவர்கள் சென்னையில் ஒன்று கூடித் தாங்கள்.