பக்கம்:தந்தை பெரியார்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 முதலாவது மாநாடு குழுமியது. மே திங்களில் 11, 12 நாட் களில் தொடங்கிய கருப்புச் சட்டை மாநாட்டிற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் அண்ணா, கொடி உயர்த் தியோர் என். அர்ச்சுனன், திராவிடநாடு' படத்திறப் பாளர் ஈரோடு எஸ்.ஆர். காந்தி அம்மையார் (மாப்பிள்ளை நாயக்கர் மகளார். சம்பத், பெரியார் விரும்பியவாறு இவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால், பெரியாரின் வெறுப்பைச் சம்பாதித்திருக்க மாட்டார்!) அண்ணாவின் அவன்பித்தனா, ராதாவின் போர்வாள்-நாடகங்கள் ஏற் பாடாகி யிருந்தன. மதுரை வையையாற்று மணற்பரப்பில் வேயப்பட்டிருந்த மாநாட்டுப் பெரும் பந்தலில் கயவர் நெருப்பிட்டுக் கொளுத்தினர். தங்கியிருந்தோர், திசை தடு மாறி ஒடும் போது, காலிகள் தாக்கினர்.இதைத் தொடர்ந்து தமிழ் நாடெங்கும் அமளி கட்டவிழ்த்து விடப்பட்டுக், கழகக் கொடிகளை வீழ்த்துவதும், கலாம் விளப்பதும் தொடர்ந்தது. ஆனால் அடுத்த வாரமே கும்பகோணத்தில் திராவிடர் மாநாடும், சுயமரியாதை மாநாடும் நடை பெற்றன. இரவில்:அண்ணாவின் சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகங்கள். உடல் நலிவோடு அண்ணாவும் இவற்றில் நடித்தார். சிவாஜி கணேசன் சிவாஜி யாக வேடம் புனைந்தார்.(15-12-1945 அன்று இந்த நாடகம் சென்னையில் அரங்கேறியது. அதுவரை ஸ்திரீ பார்ட்டாக இருந்த நடிகர் வி.சி. கணேசனுக்கு சிவாஜி வேடந்தந்து, தாம் காகபட்டராக நடித்தார் அண்ணா) ஏ.வி.பி. ஆசைத் தம்பி சுயமரியாதை மாநாட்டுத் தலைமை தாங்கினார். விருதுநகரில் காமராசருக்கு உறவினராயிருந்தும் துவக்க முதல் இறுதிவரை மயங்காத்திண்மை படைத்த சுயமரியாதை வீரராக விளங்கிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி தமது பள்ளிப் படிப்பு முடிந்த 1943-ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் ஈடுபட்டார். 1944ஆம் ஆண்டு திராவிட - மாணவூர் மாநாட்டை அங்கே கே. ஆர்.சத்தியேந்திரன் (மாவட்ட நீதிபதி அளவுக்குப் பின்னாளில் உயர்ந்தவர். 1976-ல் இந்திரா காந்தியால் பழிவாங்கப் பட்ட்ோரில் முக்கியமானவர்) போன்ற தோழர்களுடன் நடத்