பக்கம்:தந்தை பெரியார்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தினார். நகரமன்ற உறுப்பினராயிருந்தார். அண்ணா வுடன் தி.மு.க. அமைப்புக்கு வந்தார். காந்தியார் சாந்தி ய்டைப் என்ற நூலை எழுதியதற்காக 6 மாதக் கடுங் காவல் தன்டனை பெற்றுச் சிறையிலிருந்தபோது, அரசு 1950-ல் இவர் தலையை மொட்டையடித்தது. 1957-ஆம் ஆண்டிலும் 1967-ஆம் ஆண்டிலும் சென்னையில் சட்ட மின்ற உறுப்பினரானார். கலைஞர் ஆட்சியில் சுற்றுலா வாரியத் தலைவராயிருந்தார். 1977-ல் வடசென்னை: நாடாளு மன்றத் தேர்தலில் வென்றார். 1979 ஏப்ரல் 7-ஆம் நாள் அந்தமானில் திடீரென மறைந்தார். தனி அரசு' இதழாகவும் நாளேடாகவும் நடத்தி-அச்சம் தயை தாட்சண்யமின்றி எழுதினார். தொலைவிலிருந்து கேட்பார்க்குத் தந்தை பெரியார் பேசுவது போல்வே யிருக்கும் குரலும் பாணியும் இவர் கொண்டு, சிறந்து விளங்கினார். டாக்சி ஆட்டோரிக்ஷாத் தொழிற் சங்கத் த்லைவராக நீண்ட நாள் இருந்தார். இன் சொல்லால் உரையாடும் பண்பாளர். குடந்தை கே. கே. நீலமேகம் தஞ்சை மாவட்டத் தில் சுயமரியாதை, திராவிடர் இயக்கப் பெருந்துரண். பெரியாரை விடுத்து அண்ணாவுடன் இவர் தி.மு.கழகத் திற்குச் சென்றது பெரியாருக்கு உட்பட எல்லார்க்குமே வியப்பு, ஓங்கிய குரலால் நீண்ட நேரம் மேடைகளில் பேசுவார். நிறைய சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வைத்துள்ளார். - - - - - சேலம் முனிசிபல் கல்லூரித் தலைவர் ஏ. இராம. சாமிக் கவுண்டரும், அவரது துணைவியார் கனக்ம்மை யாரும் திராவிடர் இயக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட் டார்கள். எந்தக் கூட்டமோ, மாநாடோ, தயங்காமல் பங்கேற்றுப் பணியாற்றுவார்கள். அம்மையார் அரசியல் நிகழ்ச்சிகளில் மிகத் துணிவுடன் கலந்துகொள்வார்கள். திருவெற்றியூர் சண்முகம் பெரியாரின் அன்பர். இடைவிடாது நீதிக்கட்சிக்காக உழைத்த பெருந்தகை யாளர். அண்ணாவிடமும் பெருமதிப்புப் பெற்றார். ஜூன் திங்கள் நடைபெற்ற இரயில்வேத் தொழிலாளர் வேலை நிறுத்தம், சென்னையில் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் இவற்றை வரவேற்றும், வெற்றிபெற வாழ்த்தியும், பார்ப்பனர் சூழ்ச்சிக்கும்-பத்திரி