பக்கம்:தந்தை பெரியார்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182’ வில்லை என்பதாகக் கூறி அண்ணா, திருச்சியில், தமது நீதி தேவன் மயக்கம் போன்ற நாடகங்கள் வாயிலாய் நிதி திரட்டி உதவினார். - - உடையார்பாளையம் வேலாயுதம் என்கிற ஒரு பள்ளி ஆசிரியர் கழகப் பிரச்சாரம் செய்தார் என்ற காரணத்துக் காகக் கொலை செய்து, தாக்கில் தொங்கவிடப்பட்டது, 1947 நவம்பரில்தான்! - - ஏ.பி. சன்ார்த்தனம் தோழன்’ என்றொரு திங்களிதழ் தொடங்கினார். அவரை நம்பலாம்' என்று பெரியார் 1.11-47-ல் நற்சான்றிதழ் வழங்கினார். இவர்தாம் பெரி யாரில் பெரியார் என்றார் பட்டுக்கோட்டை அழகர்சாமி, அப்போது பெரியாரைப் பற்றி! வால்மீகி ராமாயணத்தைப் பெரியார் மிக நுணுக்க மாக ஆராய்ந்து தெளிந்தவர். அந்த ஆதி காவியத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்த கம்பனுக்கு, என்ன அவசியம் வந்ததோ தெரியவில்லை-அதில் உள்ள சாமான்ய மனிதர்களையெல்லாம் தெய்வங்களாகப் படைத்து உலவ விட்டான். கம்பராமாயணம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதால் கிடைத்ததைவிடப், பக்தி மார்க்க நூல் ஆண்டவன் அவதார மகிமை கூறும் இதிகாசம் என்பதால், கிடைக்கும் பெருமையே அதிகம். எனவேதான் கம்பன் தமிழ்க் கவிஞனென்கின்ற தயவு தாட்சண்யம் பாராமல் பெரியார் கண்டித்தார். மேலும், நாடகம், தெருக்கூத்துகள் வாயிலாகவே இராமாயணம் அதிகமாகப் பரவியிருப்பதால், அதே வழியைக் கையாண்டு. வான்மீகிப் படைப்பின்படி இராமாயணப் பாத்திரத்தைச் சிருஷ்டித்து, நாடகம்ாக நீடத்த விரும்பிய பெரியார், உண்மை இராமாயணம் என்' னும் பெயரில், நாட்க உருவில், தொடர்ந்து குடி அரசு' இதழில் எழுதி வந்தார். - சுயராஜ்ய ஆட்சி என்ற பெயரால் கடைந்தெடுத்த முதலாளிகள் ஆட்சிதான் டெல்லியிலும், சென்னையிலும் தடைபெறுகின்றன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, 1948 சனவரித் திங்களில் தாம் சுற்றுப்