பக்கம்:தந்தை பெரியார்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 பயணம் செய்த எல்லா ஊர்களிலும் பெரியார் சொற்பொழி வாற்றுகையில், ஏழைப் பங்காளரான காந்தியார், பிர்லா மாளிகையில் தங்குவதும்; பெரும் முதலாளியான ஆர்.கே. சண்முகம் நிதிமந்திரியாக விளங்குவதும் நியாயமா என்று கேட்டார். சுய ஆட்சி என்பதைவிட, நல்ல ஆட்சியையே தாம் விரும்புவதாகக் கூறினார். 100க்கு 88 பேராகவுள்ள பிற்படுத்தப் பட்டோர்.தாழ்த்தப்பட்டோருக்குப்பிரதிநிதித் துவம் தரப்படாத கொடுமையை விவரித்தார். . காந்தியார் படுகொலை நிகழ்ந்து விட்டது. அவரது வர்ணாசிரம தர்ம மோகத்தையே பெரியார் கண்டித்து வந்தார். ஆனால் பார்ப்பனரல்லாதாரான காந்தியார்மீது அளவற்ற பற்றுதல் கொண்டவர் பெரியார். சித்தம் கலங்கி விட்டார். நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் 1948 பிப்ரவரி 29-ஆம் நாள் காந்தியாருக்காக அனுதாபக் கூட்டங்கள் நடத்திட அறிவித்தார். 31-1-48 விடுதலை’ ஏட்டில், மனம் பதறி அறிக்கை விட்டார். தொடர்ந்து பிப்ரவரிமாதம் முழுவதும் காந்தியாரைப் பற்றியே பேசியும், எழுதியும் வந்தார். காந்தியார் பாலுாற்றி வளர்த்து வந்த பார்ப்பனியப் பாம்பே அவரைத் திண்டிய நன்றி கொன்ற செயலை வெளிப்படுத்தினார். கோட்சே, பார்ப்பனன் என் பதை மறைத்த, இந்து', மித்திரன்’ பத்திரிகா தர்மத்தை அம்பலமாக்கினார். அய் ஹாவ் நோ பிலீஃப் இன் பர்சனல் காட்” என்று சொன்ன காந்தியாரின் சாம்பலை ஊரூராய்க் கரைத்த மூடத்தனத்தைக் கண்டித்தார். காந்தியாருக்கு நினைவுச் சின்னமாக, இந்தியாவுக்கு காந்திஸ்தான் அல்லது காந்திதேசம் என்றும், இந்து மதத்துக்குக் காந்தி மதம் என்றும், நமது ஆண்டுக் கணக்குக்குக் காந்தி ஆண்டு என்றும், பெயர் மாற்றலாமெனப் பெரியார் ஆலோசனை’ வழங்கினார். இந்தப் பெருந்தன்மையைப் புரிந்து கொள்ளும் ஆற்றலின்றி, நேரு குழுவும் பட்டேல் குழுவும் தமக்குள் போராடிக் கொண்டிருந்தன, டெல்லிப் பட்டணத்தில் எல்லாவற்றுக்குமே கருஞ்சட்டைக்காரர்தான் காரணம் என்று ®ಹಿಚ್ಟtar பத்திரிகையாளர் தூண்டி விட்டதற்