பக்கம்:தந்தை பெரியார்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பற்றிப் பெரியார் வலியுறுத்தினார். அண்ணா வராததை எம். ஆர். ராதா கண்டித்துப் பேசவே, "நடிகவேள் மாநாட்டில் நஞ்சு கலந்தார்” என்றார் மு. கருணாநிதி. வாழ்வில் ஒன்று சேராத உறவினர்கள்கூடத் தாழ்வில் ஒருங்கிணைவார்களல்லவா? ஓமந்துரார் ஆட்சி கட்டாய இந்தியை மீண்டும் கொணர்ந்து தலைவரையும் தளபதி யையும் இணைத்து வைத்தது! - - விபரீதமான வெடி என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட ஒரு தாக்கீது, டெல்லி மத்திய அரசால் மாநிலங்களுக்கு மே.இறுதியில் அனுப்பப்பட்டது.பெரியாரின் உயிர் நாடியான கம்யூனல் ஜி.ஓ. கூடாது என்பதே அது பெரியார் சிலிர்த் கெழுத்து உடனே அரசியல் நிர்ணய சபையைக் கலைக்க வேண்டும் வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்த பின்பே, அரசியல் சட்டம் நிறைவேற்றுவோம், என்று காங் கிரசார் அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, நூற்றுக்குப் பத்துப்பேர் வாக்கைப் பெற்றுத், தாங்களே விருப்பமானவர்களை நியமித்துக்கொண்டு, இரண்டாண்டு களாய்ச் செயல்பட்டுப், பல சட்டங்களை உருவாக்கி வரும் அரசியல் நிர்ணய சபையின் அமைப்பு செல்லாது; எங்களை யும் கட்டுப்படுத்தாது” என்று இந்தியாவிலேயே ஓங்கிக்குரல் கொடுத்த ஒரே ஒரு முழு மனிதர் பெரியார்தான்! திராவிட நாடு பிரச்சினையைக் கேலி பேசிய பிரதமர் பண்டித நேரு வுக்கும் பெரியார் விளக்கமுரைத்து, அடுத்த ஜூலை முதல் ஒவ்வோராண்டும் ஜூலை 1ந்தேதி திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடுமாறு கழகத்தார்க்கு வேண்டுகோள் விடுத்தார். . அரசு வாளா இருக்குமா? பாய்ந்தது விடுதலை’ மீது! 19-6 48 அன்று “விடுதலை" ஏட்டுக்கு 200 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று, அதன் பதிப்பாசிரியரும் வெளியீட்டாளருமான மணியம்மையாருக்கு அரசாணை வந்திது. அம்மாதம் 24ஆம் நாள், திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி ஆராய்ந்தது.