பக்கம்:தந்தை பெரியார்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 'என் நாட்டின் சுதந்திரத்தை முன்னிட்டுச் செய்கிறேன். அய்தராபாத் போராட்டம் துவக்கப் பட்டால் என் கிளர்ச்சியை நிறுத்திக் கொள்வேன்’ என்றேன். - அதன்மீது அது பற்றிச் சிறு விவாதம் நடந்தது.முடிவாக "நான் எப்படியோ மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இப்போது இருக்கிறேன். என்னைப் பற்றித் தவறாய்க் கருதக் கூடாது' என்றேன். கலவரம் ஏதுமின்றி நடத்துங்கள் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிப், பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு என்னை வழியனுப் பினார். . - - கிளர்ச்சி தொடங்கியதும் அவரும் அவரது கடமையைச் செய்தார். எப்படியோ முடிந்தது!’ நாள்தோறும் மறியல் நடைபெறுவதும், கர்ப்பிணிப் பெண்டிர் உட்பட மறியல் தொண்டர்களைக் கைதுசெய்து, சிறையில் அடைக்காமல், லாரிகளில் ஏற்றி, நகருக்கு வெளி: யில் காட்டுப்புறத்தில் இறக்கி வருவதுமாக அரசின் அடக்கு முறை விநோதமாயிருந்தது. போராட்டம் தொடரவே;. சிறைத் தண்டனை அடி உதை வலுத்தது. ஊருக்கு ஒருவித மாகப் போலீஸ் அடக்குமுறை வேட்டை தர்பார் நடந்தது. ஆகஸ்டு 23-ல் சென்னை வரும் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்ட முடிவு மேற்கொண்டதை ஒட்டி, 22ஆம் நாளே தலைவர் பெரியாரும், தளபதி அண்ணாவும் கைது: செய்யப்பட்டு, 27ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டனர். 28-8-48 அன்று பாரதிதாசனின் இரணியன் நாடகம் தடை செய்யப்பட்டது. தடையை மீறிப் பல ஊர்களில் இரணியன் வேடத்தோடு தொண்டர்கள் கைதாயினர்1 - 1948-செப்டம்பர் 11-ஆம் நாள் ஜின்னா மறைவு குறித்துப் பெரியார் பெரிதும் மனம் வருந்தி அறிக்கை வெளி: யிட்டிருந்தார். இந்தி எதிர்ப்பு மறியல் தொடர்ந்து நடை. பெற்று வந்தது. ஆனால் 14-9.48 அன்று அய்தராபாத்தில் இந்தியப் போலீசு நுழைந்த செய்தி கிடைத்தவுடன், அரசுக்கு இந்த நேரத்தில் தொல்லை தர வேண்டாம் என்ற நன்னோக்கத்தில், தற்காலிக மறியல்நிறுத்தம் செய்தார்.