பக்கம்:தந்தை பெரியார்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பிரித்தார் மணியம்மை திருமணம்-கழகம் பிளந்தது-சனவரி 26, 1950 துக்க நாள்-பொன் மொழிகள்' தண்டனை - வகுப்புரிமைக்குத் தீங்கு-"அரசியல் சட்டம் ஒழிக’ -சுரண்டல் தடுப்புப் போர்1949முதல் 1951 முடிய. 'திருக்குறள் மூடநம்பிக்கை குறைவாக உள்ள பழைய நூல். அதிலுள்ள முதலதிகாரமான கடவுள் வாழ்த்து கூடக் கடவுளுக்கு உருவமோ வடிவமோ கற்பிக்கவில்லை. புராணக் கற்பனைக் கதைகள் அதில் நிறைய இடம் பெற இல்லை. உரையாசிரியர்கள் வேண்டுமானால் பிற்காலத் தில் ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருக்கலாம். மூல நூலில் வள்ளுவர் அறிவுக்குப் பொருத்தமாகவே எழுதி உள்ளார். அவர் தமிழனாக இருந்து விட்டதால், அதிலும் அவர் நூல் காலங்கடந்து, சிறப்புடன் பல தடைகளையும் தாண்டி, மங்காப் புகழுடன் விளங்குவதால், அந்த நூலா சிரியர் பார்ப்பானுக்குப் பிறந்தார் என்றும், அதனால்தான் அவருக்கு இவ்வளவு ஏற்றம் என்றும், கதை கட்டி விட்டார்கள். ஆரிய நச்சுக் கருத்துகளுக்குப் பெரிதும் இடந்தராமல், வள்ளுவர் உயர்ந்து நிற்கிறார். எனினும் வள்ளுவர் குறளைப் புலவர்கள்-பண்டிதர்கள்-தமக்குள் அடக்கிக் கொண்டார்கள். இராமாயணம், பாரதம், பாக வதம், கீதை இவற்றைப் புறக்கணித்துவிட்டுத் தமிழர் திருக் பெ.-13 -