பக்கம்:தந்தை பெரியார்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 என். வி. நடராசன், எஸ்.குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு போன்றார் முயன்றுபார்த்தனர். பெரியார் இணங்கவில்லை. அண்ணா இதைக் கேள்வியுற்றுக் காஞ்சியில் போய்ப் படுத்து விட்டார். தீவிரவாதிகள் சிலர் இயக்கச் சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்றனர். சுமார் இரண்டு வாரம் குழப் பத்தில் ஆழ்ந்திருந்த தோழர்கள், அவரவர் விருப்பத்திற் கேற்ப இரு கூறுகளாய்ப் பிரிந்தனர். பெரியார் செய்தது சரியே என்று கைவல்ய சாமியார் எழுதினார். சண்முக வேலாயுதம், தி. பொ. வேதாசலம் ஆகியோர் பெரியார் முடிவைப் பாராட்டினர். இதற்கிடையில் யாரோ குறும்பு செய்து, பெரியார், தாம் திருமணம் புரிந்த செயலுக்கு வருந்துவதுபோல, அவர் கையெழுத்திட்ட வெறுந்தாளின் மேற்புறத்தில், ஓர் அறிக்கை தயாரித்து, வருத்தமும் விஞ்ஞாபனமும் என்ற தலைப்பில், 28-7-49 விடுதலை’ நாளேட்டிலேயே வெளிவரச் செய்தனர். இது 30-7-49 'குடி அரசு' இதழிலும் மறுபதிப்புப் பெற்றது. அண்ணா, அன்பழகன், கருணாநிதி ஆகியோரது நடவடிக்கைகளில் அதிருப்திகொண்டு, அவர்கள் பெயர் விடுதலை'யில் வரக்கூடாது என்று பெரியார் கூறியும், அது நிறைவேற வில்லை. விடுதலை' அலுவலகத்தில் சம்பத், கணேசன், அரங்கண்ணல், கோவிந்தசாமி ஆகியோர்மீது பெரியாரின் சந்தேகம் படர்ந்தது. தம்மைக்கொல்ல யாரோ சதிசெய்கி றார்கள். சம்பத்தும் சூதனாகிவிட்டான்-என்று பெரியார் 13.7-49:விடுதலை'யில் எழுதினார். பெரியார்மீது அண்ணா வும் சம்பத்தும் வழக்குத் தொடுத்தபோது, பெரியார். விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதால், வழக்கைத் திரும்பப் பெற்றனர். - - இராம. அரங்கண்ணல் 1946-ல்திருத்துறைப்பூண்டி யில் திராவிட மாணவர் மாநாடும், முதலாவது கருப்புச் சட்டை மாநாடும் நடத்தியவர்களில் ஒருவர். 'விடுதலை’, குடி அரசு' இதழ்களில் சில காலம் பணி யாற்றிப், பின்னர் கர்ஞ்சியில் 'திராவிட நாடு’ அலுவலகத்திலிருந்தார். 1962, 1961-ல் மயிலாப்பூர்,