பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

123


1. குலோத்துங்க சோழநல்லூர் (சாஸனம்)
2. விரையா தகண்டன் (௸)
3. செம்பி (மருதுறைக்கோவை)
4. கருந்தை (௸)
5. வீகை வீரை (௸)
6. தேவை (௸)
7. மணவை (௸)
8. மழவை (௸)
9. புகலூர் (௸)

என இவையாம்.

இவ்வூர்களில் அரசாண்ட பழைய சேதுபதிகள் பெயர்கள் முறையே தொடராக இப்போது கிடைக்கப்பெறாவிடினும் சேதுபதிகள் வரலாறு குறித்துள்ள பழைய கையெழுத்துப் பிரதியொன்றாற் சிலபெயர்கள் அறியலாவன. அப்பெயர்கள் வருமாறு:-

1. ஆதிரகுநாதசேதுபதி,
2. ஜயதுங்கரகுநாதசேதுபதி
3. அதிவீரரகுநாத சேதுபதி,
4. வரகுணரகுநாத சேதுபதி,
5. குலோத்துங்க சேதுபதி
6. சமரகோலாகல சேதுபதி,
7. மார்த்தாண்டபைரவ சேதுபதி,
8. சுந்தரபாண்டிய சேதுபதி,
9. காங்கேயரகுநாத சேதுபதி
10. விஜயமுத்துராமலிங்க சேதுபதி.

இவர்கள் சேது நாட்டுள்ள சில பழைய கோயில்களைக் கட்டுவித்தனர் எனவும், அவற்றிற்குச் சில கிராமங்கள் அளித்தனர் எனவும், கூறுவதேயல்லது, வேறு இவர் காலம், ஊர், செயல் முதலியன ஒன்றும் விளங்குமாறு, அவ்வரலாறு கூறிற்றில்லை. இவர்க்குப் பின் கி.பி. 1604-ஆம் வருடமுதல் இந்நாடாண்ட சேதுபதிகள் வரலாறே, அஃது ஒருவாறு தொகுத்துரைப்பதாகும். அதுவே Mr. Nelson's