பக்கம்:தமிழஞ்சலி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி ஆனால், ஊர் உடமைமைகளைப் பொதுமக்களுக்கு விரோதமான சக்தியும் - கொடுங்கோலும் அபகரித்துக் கொண்டு வரும் அந்தக் கப்பல் கட்சிகளைத் தனது புயல் வேகச் சக்தியால் மோதி, அவர் பொடி பொடியாக்கி வந்தார். இதிலிருந்து நான் பெற்ற பாடம் என்னவென்றால் - நிலம் தோன்றுவதற்கு முன்னாலேயே இருக்குமானால், அதை எதிர்க்கும் ஒரு பொய்ச் சக்தியும் இருக்குமானால், இவைகளின் போராட்டத்தை, நீதி எப்படி நியாயக் கண் கொண்டு பார்க்கிறதோ, அதனைப்போல, பொதுமக்களது வாழ்க்கைக் கடலின் மத்தியில் - அவ்வாழ்க்கையின் மீதே ஊர்ந்து வருகின்ற கயவர்களை - உறுதியாக உடைத்தெறியும் ஆற்றல் பெற்றவர் அண்ணா அவர்கள்; என்பதேயாகும். அறிஞர் அண்ணா அவர்களின் ஆழமான உள்ளத்தில், நீதியை நேர்மையை இழந்தவர்களைத் தட்டிக் கேட்கும் ஒரு நியாய புத்தியைப், பனிமலையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. பனிமலைக்கு அடுத்து, வெகு தூரத்தில், கடலின் மேல் மட்டத்திற்கு வந்தேன். அங்கே பவழ மலைகள் காணப்பட்டதைக் கண்டேன். அத் தீவுகள், மிகக் குறுகிய அளவிலிருந்தாலும், அது - இந்த விரிந்த உலகத்திலிருக்கின்ற - மக்கள் மதிக்கின்ற பவழத்தையும் வைத்துக் கொண்டி ருக்கிறது. } 08

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/118&oldid=863460" இலிருந்து மீள்விக்கப்பட்டது