பக்கம்:தமிழஞ்சலி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கனகமணி அண்ணா ஒரு கதிரவன்! கதிரவனே, நீ வந்தாய்! நான் முளைக்க ஆரம்பித்தேன்! நான் காலையா? மனத்தின் மலரா? இனம் புரியாத காலமா? உனது கிரணங்களால், எனது யாழ் சோலைக்கு நடுவில் மின்னுகிறது. உனது வரவால், என்னில் பூட்டியிருக்கின்ற தந்திகள் மீட்டாமலே பாடுகின்றன! எனது ஜீவன், உனக்கு முன்பேயே கடன்பட்டிருக்கின் றது! கடன் வாங்கியவன் அதைத் திருப்பித் தரவேண்டும். ஏ, இளம் கதிரே, திக்கெட்டும் ஒளிப் பிழம்பை விரவிவரும் உனது திருமுகத்திற்கு முன், என்னுடைய அடிமைத்தனம் மறைந்தொழிகின்றது! }47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/157&oldid=863503" இலிருந்து மீள்விக்கப்பட்டது