பக்கம்:தமிழஞ்சலி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அந்த விளக்கத்தில் இருக்கின்ற ரகசியங்களைக் காலம் ஒன்றால்தான்; பிறகு பிறப்பவர்களுக்கு அறிவிக்க முடியும். அம்மா! உனது ரகசியத்தை அறிவதற்கு, நான் நெடுந்துரம் வந்திருக்கிறேன். நான் செல்லுகின்ற நீரோடையின் இரு மருங்கிலும் - வாளெடுத்துப் போர் வீரர்களைப்போல, நாணற்புற்கள் கரையில் முளைத்திருக்கின்றன. இப்போது நான் மிகவும் களைத்து விட்டேன். ஒரு நானற் புல்லின் அடியிலே நான் இளைப்பாறுகிறேன். அந்தப் புல்லின் தண்டின்மேல், ஒரு வானம்பாடி இசை ஓசை எழுப்பிற்று? அதன் கண்டத்தில், ராஜசபையில் பாடுகின்ற வித்துவானின் குரல் தோற்றமளித்தது: அதன் கவிதையில், பாவேந்தர் சுப்ரத்தினத்தின் புரட்சி யாப்பும் இருந்தது. அதன் தாளத்தில், பாரதியாரின் கும்மி இருந்தது. அதன் இசையலையில், தாயே உன்னுடைய தேனமுதத் தாலாட்டும் இருந்தது: அந்த வானம்பாடி பாடிய பாட்டுதான் - என்ன? "வினையோடும், சுரமண்டலத்தோடும், மத்தளத் தோடும் நடனத்தோடும் - யாழோடும் தீங்குழலோடும் - ஒசையுள்ள இசைத் தாளங்களோடும், உரிமையைப் பாடிக்கொண்டு வாருங்கள்" என்ற பொருள்தான் - அதன் பாட்டிலே ரீங்காரமிட்டது. 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/192&oldid=863542" இலிருந்து மீள்விக்கப்பட்டது