பக்கம்:தமிழஞ்சலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி நீருக்கு வேரில்லை! அது நகர்ந்து வந்த திக்கு, யாருக்கும் தெரியாது! ஞானி, அதன் முடிவை சிந்திக்கிறான்! அது மேலே இருக்கும்போது - பலத்தோடு வழிகிறது. நில இதயத்தில் அது விழும்போது, பூ போல மென்மையாகிறது. அதற்கு விரோதமாக எந்தப் பூக்களும் பூத்ததில்லை! நீர்வீழ்ச்சி ஜீவராசிகளின் தாய்! அது ஊறிய மண்ணில் எத்துணை குளுமை! ஏழையின் கண்ணிலிருக்கின்ற இரக்கத்தையும் - தமிழ் மொழியிலிருக்கின்ற ஈரத்தையும் - நீர்வீழ்ச்சி: வென்று விடுகிறது! பள்ளத்தாக்கில் அது விழுந்தாலும் - கடலுக்குக் குழந்தையாகி விடுகிறது. கயவர்களும் அதைக் குடித்துத் தாகம் தீர்த்துக் கொண்டனர் - ஆனால், வென்றதில்லை. மன ஊருக்குப் பக்கத்தில் - அது நீண்ட காலமாக விழுந்து கொண்டிருக்கிறது. அது வற்றிவிடாதோ என்று - கோடைக்கால நெஞ்சங் கன் எதிர்பார்த்தன. அதுவா வற்றும் எப்போது வானம் கண்ணைத் திறந்ததோ - அப்போதே அது மண்ணைத் தொட்டது. தீர்த்தமென்று அதைத் தெய்வீகன் கூறுகிறான். 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/28&oldid=863581" இலிருந்து மீள்விக்கப்பட்டது