பக்கம்:தமிழஞ்சலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி இவ்வாறு ஒரு நொடியில் நான் நினைத்தேன்! ஆனால் மறுநொடியில்...! வில் உடைந்தது! எந்தப் பூமியை நான் ஏளனம் செய்தேனோ, அதே பூமியிடம் நான் சரணாகதியடைந் தேன். தலை குப்புற வீழ்ந்தேன்! கீழிருந்தவாறே வானை நோக்கினேன்! வெற்றி பெற்றவனிடம், தோற்றவன் தனது தோல் வியை மறந்து எரிச்சலால் ஏசுவதைப் போல, நானும் வானை ஏசினேன்! என்னைச் சூழ்ந்து நின்றவர்கள், எனது அறியா மையைக் கண்டு இரங்கினார்கள். நான் மட்டும் என் குற்றத்தை மறந்தேன். ஆனாலும் முயற்சி திருவினையாக்கும் என்ற குறள் - எனக்கு மீண்டும் புதுவலிவை ஊட்டியது! ஏறிய தகுதி இறங்கிய பிறகு - ஒருவன் மனம் போனவாறு பேசுவது - மனித இயற்கை என்பதை ஒருவாறு உணர்ந்தேன். வானவில்லை; மீண்டும் நான் அடைய முடியாதுதான். அதனால் - அதன் பெருமைன்ய உணர்ந்தபடியே சிந் தித்தேன்! தத்துவங்கள் பலவற்றைக் கொண்ட வானவில், என அறிவின் தலைவனுக்கு ஈடாகுமோ என்று எண்ணினேன்! 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/41&oldid=863596" இலிருந்து மீள்விக்கப்பட்டது