பக்கம்:தமிழஞ்சலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி சாதாரண ஒரு மாதவிக் கொடி இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டதைப் போல அவரும் உலக இலக்கியமாகத்தான் திகழப் போகிறார்: பச்சை நிறம் வளத்தைக் காட்டும் வண்ணம்! அது, அவரது பண்பாட்டு வளத்தை அவனிக்கு அறிவித்தே தீரும்: ஞாலம் அவர் புகழ் பின்னே ஓடிவரும் காலம், மிகத் தொலைவிலில்லை தம்பி! பச்சையை நீ மாயை என்றால்; பார் நம்புமா? பேதை மானிடனே! அதுமட்டுமா? வெற்றிலை போட்டறியாது! ஆனால், வாய் சிவந்திருக்கும்! கொவ்வைக் கனியருந்தும், கொஞ்சு மொழிகள் பேசிடும்! அந்த அஞ்சுகத்தின் நிறமும்கூடப் பச்சையன்றோ! கண்ணின் கருமணிகள் குளிர - காட்சி பல வழங்கி; மண்ணில் தெரிகின்ற முதல் நிறமும் பச்சைதானே...! பச்சைத் தழைகட்டி, பந்தலை உருவாக்கி, இருமனமும் ஒருமனமாய் இணைந்து பிணைகின்ற இன்பத் திருமணத்தில் காட்சி நல்குவதும் கவின் பச்சை! இந்த இன்ப நிறத்தை போய், எத்திற மனங்கொண்டு மாயை என்கிறாய்? தேர்ந்த அறிவாளன், தென்னவர் மன்னன் பார்க்கும் கற்பனை! 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/56&oldid=863612" இலிருந்து மீள்விக்கப்பட்டது