பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சி.என். அண்ணாதுரை தமிழ் வளர்ச்சியில் நல்ல காலம் "சங்கீதப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாட்டுக்களையே சொல்லிக் கொடுக்க வேண்டும்; சபைகளில் தமிழ்ப் பாட்டுக்களையே பாடவேண்டும்" என்று அம்மகா நாட்டினர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைத்தனர். இத் தீர்மானத்தை எல்லா இசைக் கலைவாணர்களும் ஒப்புக் கொண்டனர். நமது நாட்டுப் பத்திரிகைகள் பலவும், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு வந்திருக்கும் நல்ல காலத்தைப் பற்றி நாவாரப் புகழ்ந்தன. தமிழ்ச் கலை வளர்ச்சியிற் கருத்துடையவர்கள் அனைவரும் உள்ளங் குளிர்ந்தனர். இத்தகைய மகாநாட்டுக்குக் காரணமாக இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனர் செட்டிநாட்டு அரசர் சர் அண்ணாமலைச் செட்டியாரவர்களைப் பாராட்டினர். அவருடைய அரும்பெரும் முயற்சிக்கு வாழ்த்துக் கூறினர். தமிழில் இசைப் பாடல்கள் இயற்றியதற்குப் பரிசளிப்பதற்காகவும் செட்டிநாட்டு அரசர் அவர்கள் பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். இச்சிறந்த வேலையைத் தனது செல்லப் பிள்ளையாகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூலமே செய்வதற்கு முன் வந்தார். முத்தமிழ் தமிழ் மொழியே, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முப்பிரிவையுடையது. இவற்றுள் இசையென்பது இயற்றமிழிலும் உண்டு; நாடகத் தமிழிலும் உண்டு. தமிழே இசையுருவாக அமைந்தது. இசையே தமிழில்தான் முதன் முதலில் தோன்றியதென்பது பல தமிழாராய்ச்சியாளர்களின் முடிவு. தமிழாராய்ச்சியுடைய, இசைவாணர்களுடைய முடிவும் இதுதான். இத்தகைய இசைத்தமிழ் இடைக்காலத்தில் குன்றிவிட்டது.