பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சி.என். அண்ணாதுரை மெஜாரிடியாரை அடக்கி ஆளும் காலம் கவிழ்ந்துவிட்டது' என்று தினமணி 1941 - செப்டம்பர் 16 - ந்தேதி இதழில் கூறியிருக்கிறது. கவிழ்ந்து விட்டதா? உண்மையாகவா? இல்லை! கவிழ்ந்து விட்டிருக்குமேயானால், நாம் பள்ளுப் பாடுவோம்! இன்னமும் கவிழவில்லை. ஆனால் கவிழ்வது மட்டும் உறுதி. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே: வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே' என்றார் பாரதியார். ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகள், போச்சே என்பதற்குப் பதிலாகப் போச்சோ என்று கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது. இன்னும் சிறுகும்பல் சீறுகிறது! ஆதிக்கம் செலுத்துகிறது! தமிழரை எதிர்க்கிறது? தமிழரின் மறுமலர்ச்சியை அழிக்கக் கருதுகிறது. ஆம்! ஜார் அடைந்த கதியை அடைந்தும், அந்தச் சிறு கூட்டம் தனது ஆணவத்தை அடக்கிக் கொள்ளத்தான் இல்லை. அதனை அடக்கத் தமிழர் எழுச்சி பெற வேண்டும். ச.மெய்யப்பன் அறக்கட்டளை ஒமலையடிகள் MARAIMALAI A8HGAL LIBRARY