பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 குத்துக்கால் பண்ணினவன் கொல்லி மலைத் தட்டானாம் அம்பக்கால் பண்ணினவன் அரியமலை தட்டானாம் மானத்திலே பூப்பரிச்சு மந்தையிலே தேர் சோடிச்சி தேரும் திரும்புதையா தேவாதிங்க கையெடுங்க கூனர் குருட ரெல்லாம் கோல் போட்டு ஏறு மலை சப்பாணி தாத ரெல்லாம் தவுந் தேறும் பொன்னு மலை தீத்த மலை நதி யளகும் திருணமலை ஜனத்தழகும் மதுரையிலே அம்மானாம்-கண்ணே மாலை கோக்கும் வன்னியனாம் சேலத்திலே அம்மானாம் செலம்பு கோக்கும் தட்டானாம் மாசிப் பெரையோ நீ-நான் பெத்த தவுந்து எழும் சூரியனே சேலத்தான் சந்தையிலே என் கண்ணே சித்தாடை விக்குதடா சித்தாடை வெலை மதிக்கும் சேனை பேர் அம்மானாம் பட்டணத்தான் சந்தையிலே பட்டு வந்து விக்குதடா பட்டு விலை மதிக்க பத்து பேர் அம்மாளம் நாகம் கொடை பிடிக்க-கண்ணே நல் பாம்பு தாலாட்ட வெள்ளி வட தேராம்-உனக்கு வெப்பாலம்-பூந் தேராம் கள்ளிக் கடைத் தேராம் கத்தாளைப் பூத் தேராம் அஞ்சிமலைக் கொஞ்சி வர-உனக்கு அழகுமலைத் தேரோட கண்ணே மலையழகா கண்ம்ணியே நீ உறங்கு