பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

138 தமிழர் நாட்டுப் பாடல்கள்

மழையில் !

மழையில் ஆறு தாண்ட முயன்ற காதலன் பாட்டைக் கேட்டோம். அதே போல் மார்பளவு தண்ணீரில் செல்லும் காதலனது பாட்டைக் கேட்போம்.

காதலன் பாடுவது

மழைக்கா இருட்டுக்குள்ள

மாரளவு தண்ணியிலே

பாதை தெரியலியே

பாதகத்தி உன் வீடு

பக்கத்து வீட்டுக்காரி

பழைய உறவுக்காரி

பழயுறவும் மங்குதடி

பாதகத்தி உன்னாலே

மழைக்கா இருட்டிலேயே

மாரளவு தண்ணியிலே

குடைபோட்டு நான் வருவேன்

குணமயிலே தூங்கிராத

ஏல முகத்தாளே

ஒட்ட வச்ச காத்தாளே

ஒட்ட வச்ச காத்துக்கில்லோ-நான்

இட்டனடி தங்க நகை

மழையே வருகுதடி

மய்யல் குய்யல் ஆகுதடி

தலையே நனையுதடி

தண்டிப் புள்ள உன் மையலிலே

நெத்திலி வத்தல் போல நெஞ்சடர்ந்த

செவத்தப் புள்ள நெஞ்சில்

படுத்துறங்கும்-நீ

பஞ்சணை மெத்தையடி.

வட்டார வழக்கு: மய்யல் குய்யல்-குழப்பம்; தண்டிப் புள்ள-பருத்த பெண், நெத்திலி-ஒருவகை மீன்.

குறிப்பு : ஒட்டவச்ச காது-பாம்படம் போடுவதற்காக காது வடித்திருக்கும் பெண்கள் அது அநாகரிகம் என்று காதை