பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 145

தாவரப் பத்தி கண்டேன், தருமர் மகன் தலை காணேன் பெரிய கம்மா திருகு கள்ளி பேர் போன ரட்ன கள்ளி மாமன் மகன் மந்திர கிளி வந்திராதோ இந்த வழி?

வட்டார வழக்கு: நைச் சிவப்பு-நைச் சிவப்பு (Nice) (வ. வ.); விரிச்சா-விரித்தால்; வச்சா-வைத்தால்; ரட்ன-ரத்தின.

சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா

              தங்கம்மாள்புரம்,
               விளாத்திகுளம்.
  நான் வருவேன் நடுச்சாமம்

காதலியின் கிராமத்திற்கும், காதலனின் கிராமத்திற்கும் இடையில் பொருனையாறு ஓடுகிறது. மழைக்காலம் ஆற்றில் கழுத்தளவு தண்ணீர் வருகிறது. கரையிறக்கத்தில் கிடந்த தோணி தண்ணீரோடு போய் விட்டது. அன்றிரவு அவன் அவளிடம் வருவதாகச் சொல்லியிருந்தான். அச் சொல்லைக் காப்பாற்ற வெள்ளத்தை நீந்தியே சென்று விடுவதென முடிவு செய்கிறான். அக்கரையிலிருந்தே அவன் பாடுகிறான். இக்கரையிலிருந்த காதலிக்கு அது கேட்டதோ இல்லையோ?

ஆத்துல தோணிவிட ஆளிறங்காத் தண்ணி வர நான் வாரேன் நீச்சலில் நினைவாப் படுத்திரடி சடசடணு மழை பேய சாமம் போல இடி விழுக கொடை பிடிச்சு நான் வாரேன் குணமயிலே துரங்கிராத இடி விழுந்துசமழை பெய்ய கொடை பிடிச்சு நான் வாரேன் குண மயிலே தூங்கிராத நாராங்கி வீட்டுக்காரி நடுத் தெருவு வெள்ளையம்மா நான் வருவேன் நடுச் சாமம் நாயை விட்டு ஏவிராத