பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல்

217


          குறுக்குச் சவளுதையா 
          கூந்த லொரு பாகத்துக்கு 
          சேக்குத் தலை சீவி 
          செந்துருக்குப் பொட்டு வச்சு 
          சோக்குப் போல நட நடந்தா-நான் 
          துரைகளுண்ணு மதிச் சிருவேன்
          தேக்கம் பலகையில 
          தேனொழுகும் மெத்தையில 
          மன்னவர் கொடங்கையில 
          மத்தவர் அணைஞ்சிராம 
          நிறை பானைத் தண்ணிபோல 
          நிணலாடும் என் சதுரம் 
          குறை பானத் தண்ணி போல 
          குறை யுதனே ஒம்மாலே.
          காவலிருந்தாலென்ன ? 
          கல்லு வெடி போட்டா லென்ன? 
          இமுசு படுத்திட்டாலும்-நான் 
          எஜமானிடம் வந்திருவேன் 
          பச்ச மயங்குதனே 
          பவளக்காடு வாடுதனே-நான் 
          இச்ச பட்ட நேரமெல்லாம் 
          ஏங்கி முகம் வாடுதனே

காதலன்: ஆத்துத் தண்ணி சேந்திருக்க

         அமிர்த குணம் பாத்திருக்க 
         சேந்த கிளி இங்கிருக்க 
         தேச வழி போக வேண்டாம் 
         சட சடனு மழை பொழிய 
         சாமம் இடி விழுக 
         குடை போட்டு நானும் வாரேன் 
         குண மயிலே தூங்கிராத

காதலி: ஆசை யெல்லாம் அவருமேலே

       அவரு இங்க வரவேண்டாம் 
       தேசமோ தில்லு முல்லு-நம்ம 
       திரிஞ்ச நாள் போதுமையா 
       ஓடுத தண்ணியில 
       ஓட விட்டேன் பம்பரத்த