இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல்
217
குறுக்குச் சவளுதையா கூந்த லொரு பாகத்துக்கு சேக்குத் தலை சீவி செந்துருக்குப் பொட்டு வச்சு சோக்குப் போல நட நடந்தா-நான் துரைகளுண்ணு மதிச் சிருவேன்
தேக்கம் பலகையில தேனொழுகும் மெத்தையில மன்னவர் கொடங்கையில மத்தவர் அணைஞ்சிராம நிறை பானைத் தண்ணிபோல நிணலாடும் என் சதுரம் குறை பானத் தண்ணி போல குறை யுதனே ஒம்மாலே.
காவலிருந்தாலென்ன ? கல்லு வெடி போட்டா லென்ன? இமுசு படுத்திட்டாலும்-நான் எஜமானிடம் வந்திருவேன் பச்ச மயங்குதனே பவளக்காடு வாடுதனே-நான் இச்ச பட்ட நேரமெல்லாம் ஏங்கி முகம் வாடுதனே
காதலன்: ஆத்துத் தண்ணி சேந்திருக்க
அமிர்த குணம் பாத்திருக்க சேந்த கிளி இங்கிருக்க தேச வழி போக வேண்டாம் சட சடனு மழை பொழிய சாமம் இடி விழுக குடை போட்டு நானும் வாரேன் குண மயிலே தூங்கிராத
காதலி: ஆசை யெல்லாம் அவருமேலே
அவரு இங்க வரவேண்டாம் தேசமோ தில்லு முல்லு-நம்ம திரிஞ்ச நாள் போதுமையா ஓடுத தண்ணியில ஓட விட்டேன் பம்பரத்த