பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 தமிழர் நாட்டுப் பாடல்கள் இருக்காங்க எங்க மச்சான் இன்பமாகத் தலைப்பாக் கட்டி அவன்: நேராக வளர்ந்த புள்ள நித்திரைக்கு ஏத்த புள்ள கொண்டாடி தலை முடியை கொடுங்கையில் போட்டுறங்க மானத்திலே ரோட்டுப் போட்டு மாதுளம் பூப் பாய் விரிச்சு அங்கே இருந்து பேசுறாளே அரக்கு லேஞ்சுக் காரனோடே களை எடுத்துக் கை கழுவி காலாங்கரைப் பாதை கூடி முகங் கழுவி முத்தம் தந்தால் மூணு லட்சம் பொன் தருவேன் ஒன்னையே நம்பி யல்ல ஒரு வருஷம் தலை வளர்த்தேன் கலியாண மாத்தையிலே கை கடந்த மாயமென்ன? கட்டப்புள்ள குட்டப்புள்ள கருவ மணி போட்ட புள்ள என்னைக் கெடுத்த புள்ள அன்னா போறா சின்னப் புள்ள அவள்: கொத்த மல்லித் தோட்டத்திலே குளிக்கப் போயி நிக்கயிலே கொத்தோடு பூவெடுத்து விட்டெறிஞ்சான் அத்தை மகன் அத்தை மகனின்னு செத்த மனம் பொறுத்தேன் மத்தவன் ஒருத்தனானால் மாட்டிருவேன் கைவிலங்கு பச்சச் சிகப்புக் கல்லு பளிங்கு நிறம் உங்க பல்லு பல்லு அழகுக்காக-நான் மாறாத ஆசை கொண்டேன் வட்டார வழக்கு: அரக்குலேஞ்சுக்காரன்-வேறோர் முறை மாப்பிள்ளை; தலை வளர்த்தேன்-சிரைக்காமல் முடியை வளர விட்டேன்; மாத்தையிலே-மாதத்திலே.