பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமண வாழ்த்து திருமணத்தின் போது வாழ்த்துக் கூறுதல் நமது தமிழ் நாட்டின் பழமையான வழக்கம். சிலப்பதிகாரத்தில் பண்டைக் காலத்தில் பாடப்பட்ட வாழ்த்து குறிப்பிடப் பட்டுள்ளது. அஷ்ட மங்கலங்களையும் ஏந்திய மகளிர் கண்ணகியைத் திருமண மேடையிலேற்றி, 'காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அறுகஎன ஏத்திச் சின்மலர் கொடு தூவி அம்கண் உலகின் அருந்ததி, அன்னாளை மங்கல நல்லமளி ஏற்றினார் - தங்கிய இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே' என்று வாழ்த்தினார்களென்று இளங்கோவடிகள் கூறுகிறார். இம்மங்கல வாழ்த்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. மணமக்கள் வாழ்த்து முதற் பகுதி, சோழமன்னனது வெற்றியைப் போற்றிப் பாடுவது, இரண்டாவது பகுதி. தற்காலத் திருமண வாழ்த்துக்களில் மணமகளுக்கு வாழ்த்துக் கூறுவது மட்டுமே வழக்கத்தில் இருக்கிறது. திருமணத்திற்கு முன் நிகழ்ந்த பல சம்பவங்களும் இவ் வாழ்த்தில் கூறப்படும். மணப்பந்தல் வர்ணனை, மணமகன், மணமகள் பெருமை, மணச்சடங்கு முறை, ஆரத்திப்பாட்டு முதலியன யாவும் இதனுள் இடம் பெறும். மண நிகழ்ச்சிகள் பலவகைப்படும். கண்ணகி கோவலன் மணம், தாலிகட்டுதல் என்ற சடங்கின்றி நடை பெற்றதென்று