பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம்

303

கொண்டு வந்து தந்தாராம்
அரியத் தெரியாமல்
அரமணைக்கு ஆள் விட்டாள்
சீவத் தெரியாமல்
திருமணைக்கு ஆள்விட்டாள்
அரமனை மாராசன்
திருமணையும் கொண்டு வந்து
அரிஞ்சு கொடுத்தாராம்

அழுதுத் துடித்தாராம்
அரிப்பாளாம் பொரிப்பாளாம்
முத்தம்மா அரிசி சோறு தானிடுவாள்

முத்தம்மா



நெய்யாலே கச்சாயம்
சுடுவாளாம் முத்தம்மா
நேர மொரு பட்டுடுத்தி
வருவாளாம் முத்தம்மா
அரளிச் சுருள் ஒலையைத்தான்
அழகான கட்டிலிலே
நடுவிருந்து வாசிப்பார்
நம்ம தம்பி முத்தையா
குனிஞ்சு தான் சோறிடுவாள்
கற்பு மவள் நம்ம தங்கை
வாரி மனங் கொள்வார்
வரிசையுள்ள நம்ம தம்பி
எடுங்கடி பெண்டுகளே
எல்லோரும் தான் குலவை
போடுங்கடி பெண்டுகளே
பொன்னா லொரு குல்வை


வட்டார வழக்கு: வடிச்சாள்-வடித்தாள்; பொரிச்சாள் - பொரித்தாள்; சாஞ்சு - சாய்ந்து; மாராசன்-மகராஜன், தந்தையைக் குறிக்கும்; திருமனை-திருகுமணை; அரிஞ்சு-அரிந்து(அறுத்து); குனிஞ்சு - குனிந்து; குலவை - குரவை; மங்கலமாக-ஒலி எழுப்புவது.


::உதவியவர்:
இடம்:
:புலவர் இராம இராசன்
வேலூர்,
::சேகரித்தவர்:
சேலம் மாவட்டம்.
:சின்னப்ப பாரதி