பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம். 337 தடை அதிகமில்லை. நிரை காப்பவனாதலால் நாலைந்து பெண்களை மணம் செய்து கொண்டு அவர்கள் கொண்டு வரும் பசு நிரைகளைக் காத்து பெருக வைத்துப் பெருமையடைவான்.

   நிலப்பிரபுத்துவம் தோன்றிய பின்னர்தான் சாதிப் பிரிவுகள் கடுமையாயின. இதன் அடிப்படை, வர்க்கப் பிரிவினையே. உயர்நிலை வர்க்கங்களில் பெண்கள் அடிமையாயினர். சமூக உற்பத்தியில் அவர்கள் பங்கு பெறவில்லை. தாழ்நிலை வர்க்கங்கள், அடிமை நிலைக்குத் தாழ்ந்தன. அவர்களிடையே ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு தடைகள் பல இல்லையாயினும் நில உடைமையே வாழ்க்கையை நிர்ணயித்தது. எனவே சொத்து, சொந்தத்தில் உள்ளவர்களுக்குச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உறவு முறை மனம் தோன்றியது; இதிலும் கூட அண்ணன் தங்கையாயினும், தனித்தனியாகச் சொத்து இருந்தால்தான் இவ்வுறவு.

தங்கை தன் மகனுக்குப் பெண் கேட்டு வருகிறாள். அவளைவிட அவன் பணக்காரன். பரியம் கொண்டு வந்து பெண் கேட்ட தங்கையின் பேச்சை அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை. மணமுறை உரிமையால் தன் மகன் அண்ணன் மகளை சிறையெடுத்துச் சென்று விடுவான் என்று தங்கை வஞ்சினம் கூறிச் சென்று விடுகிறாள். இது நடக்குமா? சொத்துரிமை மனித உறவு முறைகளை கட்டுப்படுத்தும் சமுதாயத்தில் இரத்த உறவுகளை சமூகம் மதிக்குமா? இரண்டு உறவு முறைகளும் சொத்துரிமையால் ஏற்பட்டவைதாமே. அண்ணனும் தங்கையும் பெண்: அண்ணாவே அண்ணாடத்தான் பெருமாளே படியளக்கும் அண்ணாடா நாயகனே அரிசி நல்லா அண்டைத்தான் அஞ்சி பொதி அர்த்த முடன் அண்டைத்தான் கொண்டு வந்தேன்