பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362 தமிழர் நாட்டுப் பாடல்கள் வளரும் 18-ல் மெள்ளவே நாடார்கள் கோயிலுக் குள்ளேதான் மேவிட எண்ணம் துணிந்தாரே ஆலயத்துக்குள் புகும் போது வெண்டர் ஆறுமுகம் பிள்ளை மற்றவரும் ஆலயம் தேடி ஈசன் சன்னதி வழி மறித்துக் கொண்டார் அந்நேரம் அன்று காளியம்மன் நந்தவனத்தை அழித்தார் தேவமார்கள் எல்லோரும் சென்று நாடார்களைக் கொள்ளை செய்வோமென்று சிந்தனை செய்தும் இருந்தாரே இந்தப்படி சிலர் செய்திடவே வெண்டர் பிள்ளை முதலான மற்றவரும் சென்றுமே அந்தக் கவர்ன் மெண்டாருக்கும் தெரியாத ரிக்கார்டு தான் முடித்தார். நாடாக்கமார்கள் கொடுத்த பிராதுகள் நன்றாச்சு கட்சி இரண்டாச்சு வாடாதருள் பெற்ற கோயில் அடைத்துமே வாழ் நகர் விட்டுச் சிலர் போனார் வெள்ளாளர் நாயக்கர் செட்டிமார்கள் அவர்கள் வேதியர் பஞ்சமச் சாதியர்கள் துள்ளின. மாடு பொதி சுமக்கும் என்று சொல்லிய பழமொழி போல் இந்த விதமிங்கு தானிருக்கக் கலி இன்னொன்று செய்தானே மாயாவி சந்தமுள மாஜிஸ்திரார் கோர்ட்டினில் சாணார் கமுதியில் தான் நடக்க ஆயிரம் பேருக்கு நாடார் ஆலயத்துக்குள் வந்திருந்து வாசல் வழியாய் வந்து புகுந்து கொண்டோம் என்று வழக்கும் என்ற கை முழுக்கும் இட்டார் அன்று முதல் கோயில் அடைபட்டுக் கொண்டது அய்யோ ஆயிரம் காலத்து மாபாவி சென்று சிவகாசி பட்டணத்தவர்கள் செய்ததைக் கேளுங்கள் மானிடரே சுத்துக் கிராமத்து நாடார்கள் செய்திட்ட தொல்லைகளும் சில சொல்லுகிறோம்: