பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சமூகம் 365

நத்தக்கண்ணு மாயாண்டி

நாக்குத் தள்ளப் போட்டாண்டி

        நீதிபதி தவிப்பு


பேரான சந்தனத்தை

பெரிய குளம் தள்ளி விட்டு

முடிவு சொல்ல மாட்டாமே

முளிக்கிறானே மாஸ்திரேட்டு

       மூக்கம்மாள் தவிப்பு

சந்தனம் பெண்டாட்டி

சபை நிறைஞ்ச மூக்கம்மாளாம்

சந்தனத்தைத் தூக்கும் போது-உன்

சதுரம் கொஞ்சம் வாடுதடி

    தாயிக்குப் போலீசார் கூறுவது

அடிக்காலத்தா

அநியாயம் செய்யலாத்தா

தலைக்காலை எடுத்துக்கிட்டு

நிறுத்துக்கடி உன்மகனை


வட்டார வழக்கு சமுச்சாரம்-சமாச்சாரம்; நாக்குத்தள்ள - தூக்கிலேற்றப் பிடித்துக் கொடுத்தான்; சதுரம்-சரீரம்.


குறிப்பு:கடைசி இரண்டடி-தலையும் காலும் இல்லாமல் உன் மகனை எடுத்துக்கொள் என்னும் கருத்துப்பட அமைந்துள்ளது.

சேகரித்தவர்: S.M. கார்க்கி

இடம்: சிவகிரி.

A519 - 24