பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 507

             ஒப்பாரி 


        தங்கரதம் கேட்டீரோ


    மணமான மகள் தந்தை இறந்த செய்தி கேட்டு இறந்த வீட்டிற்கு வருகிறாள். தன்னையும், தனது சகோதர, சகோதரிகளையும், தந்தை அருமையாக வளர்த்த கதையையெல்லாம் சொல்லி அழுகிறாள். இத்தகைய தந்தையின் அன்பு நீடித்து இருக்க வழியில்லாமல் இறந்து விட்டாரே என்று ஏங்குகிறாள். இனி பிறந்த வீடு தேடி வந்தால், மதினிமார் மரியாதையாக வரவேற்க மாட்டார்கள் என்றெண்ணி அழுகிறாள். அருமையாக வளர்த்த மகளை மறந்துவிட்டு எமதர்மனைக் கேட்டு தங்கரதம் கொண்டுவரச் சொல்லி தந்தை போய்விட்டாரே என்று மகள் ஆற்றாது அரற்றுகிறாள்.


    பரட்டைப் புளிய மரம்
    பந்தடிக்கும் நந்த வனம்
    பந்தடிக்கும் நேரமெல்லாம்
    பகவானைக் கைதொழுதேன்
    சுருட்டைப் புளிய மரம்
    சூதாடும் நந்தவனம்
    சூதாடும் நேரமெல்லாம்
    சூரியனைப் பூசை செய்தேன்
    ஆத்துக்கு அந்தப் புரம்
    ஆகாசத் தந்தி மரம்
    ஆழ்ந்த நிழலுமில்லை
    என்னைப் பெத்த அப்பா
    எங்களை ஆதரிப்பார் 
                யாருமில்லை
    குளத்துக்கு அந்தப்புரம்
    குங்குமத் தந்தி மரம்
    குளிர்ந்த நிழலுமில்லை- 
                எங்களைக்
    கொண்டணைப்பார் யாருமில்லை
    ஆடை கொடியிலே
    ஆபரணம் பெட்டியிலே
    சீலை கொடியிலே
    சிறு தாலி பெட்டியிலே
    நீலக் குடை பிடித்து-நீங்கள்
    நிலமளக்கப் போனாலும்
    நிலமும் பயிராகும்
    நின்னளக்கும் தோப்பாகும்
    வட்ட குடை பிடித்து