பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



64

தமிழர் நாட்டுப் பாடல்கள்

             அண்ணாவி என் குருவே, 
             அடியேன் மனதிலெண்ணி 
             பூசை முடித்து விட்டேன் 
             புண்ணியரே உமதடிமை

குறிப்பு: தெய்வம் கூறுவது என்பது தெய்வ ஆவேசம் வந்தவன் குறி கூறுகிறான். குறிப்பிட்ட வீட்டிற்குக் குறி கேட்கிறான். பெண் அந்தி மயக்கத்தில் பயந்து விட்டாள் அவளை பேயாண்டி முனியன் என்ற பிசாசு பற்றிக் கொண்டது உடல்வலியெடுத்தது. வெள்ளிக்கிழமை, நள்ளிரவு வேளையில் பலி கொடுத்தால் முனியன் போய்விடும்.

இது கருப்பன் ஆவேசம் வந்த மனிதன் கூறுவது.

இதன் பின் தெய்வம் மலையேறிவிடும்.

 சேகரித்தவர்:                         தங்கம்மாள்புரம், 
S.S. போத்தையா                   நெல்லை மாவட்டம்.