பக்கம்:தமிழர் மதம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

500 தமிழர் மதம் ணுமாக அமைந்தே கான் முளையைப் பிறப்பித்த லாலும், தாய், மைப் பண்பிலேயே அருண்மைப் பண்பு சிறந் திருத்தலாலும், இறைவனை அம்மையப்பனாகக் காட்டினர் அறிஞர். உண்மை யில், இறைவ னிடத்தில் ஆண்மையு மில்லை ; பெண்மையு மில்லை. அவன் கட் புலனான உருவின்றி எங்கும் நிறைந் திருக்கும் ஆவி வடிவான பேராற்றல் ; எண்ணுக்கும் எட்டாது எல்லாங் கடந் தவன் ; இயற்கையாகவே எல்லாம் அறிந்தவன் ; இமைப் பொழு திற் கருதிய வளவிலேயே எத்துணையு மின்றி எல்லாம் படைக்க வல்லவன் ) எவ் வகையிலும் பகுக்கப் படாத ஒப்புயர் வற்ற தன் னந் தனிப் பொருள் ; தொடக்க மிலியாக முத் தொழிலுந் தானே செய்து வருபவன் ; இம்மியும் திரியாது என்றும் ஒரே நிலைமையில் இருப்பவன். படைத்து விளையாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானொன் றிலோனும் அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன் (உ.எ; கூஉ-கரு) மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியக் குரவன். இங்ஙனம் மூன்று யிருந்த சிவன் தொழிலை மறைத்தல் (துரோபவம்) அருளல் (அனுக்கிரகம்) என்னும் இரண்டு சேர்த்து ஐந்தாக்கி, அவற்றைச் செய்பவர், முறையே, நான் முகன், திருமால், உருத்திரன், பெருவுடையான் (மகேசுவரன்), என்றும் நல்லான் (சதாசிவன்) என்னும் ஐவர் என்றும்; ஐந் தொழிலும், பருவியல் (ஸ்தூல) ஐந்தொழில், நுண் ணியல் (ஸூக்ஷ்ம) ஐத் தொழில், அதி நுண்ணியல் ஐந் தொழில் என மூவகைப்படு மென்றும்; சிவனைச் சிவம், ஆற்றல் (சக்தி), என்றும் நல்லான்மை (சாதாக்கியம்), பெருவுடை யான்மை (இசுரம்), தூவறிவை அல்லது வாலறிலம் (சுத்த வித்தை) என்னும் ஐம் மெய்ப் பொரு ளாகக் கூறுபடுத்தி; அவற்றில், முறையே, அறிவே கொண்ட சிவனும், வினையே கொண்ட ஆற்றலும், அறிவும் வினையும் சம மாகக் கொண்ட என்றும் நல்லானும், அறிவு குன்றி வினை மிக்க பெருவுடையானும், வினை குன்றி அறிவு மிக்க வாலறிவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/116&oldid=1429696" இலிருந்து மீள்விக்கப்பட்டது