பக்கம்:தமிழர் மதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் பிணங்களும் நிறைந்த பாழ்ங் காடாதலால், பிணத் தின்னும் பேய்கட்குத் தலைவியாகிய காளியே அதற்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப் பரணிப் பகுதிகளாலும், தெளிய அறிக. 15.JP பேய் நிறங் கருப்பாதலால், கருப்பு என்பதே பேயைக் குறிக்கும் பண்பாகு பெயராயிற்று. பேய்கட்குத் தலைவியாகிய காளியும், அக் கரணியம் பற்றியே அப்பெயர் பெற்றாள். அதனால் கள் - காள்--காளம்-காளி- நீலியென்றும் அவட்குப் பெயர், கருப்பி. நீலம் (கருப்பு) - நீலி. கருப்பி என்றும் நீலி என்றும், காளி பாலை பெண்டிர்க்கு இடும்பெய ரெல்லாம் காளி பெயரே. யாகிய காட்டிற்குத் தெய்வமான தனால், காடு கிழவோள் (-காடுகிழாள் - காடுகாள்) என்று சொல்லப்பட்டாள். அவள் என்றும் இளமையானவள் என்னுங் கருத்துப் பற்றி, கன்னி குமரி யென்றும் பெயர் பெற்றாள். எல்லார்க்குந் தாய் போன் றவள் என்று கருதி, அம்மை என்றும் அவளைக் குறித்தனர். கருப்பாய், நீலம்மை, அங்காளம்மை என்னும் பெயர்கள் அக் கருத்துக் கொண்டன. ஏராளமாகப் பிணங்கள் விழும் போருக்குத் தலைவி என்பது பற்றி, அமரி சமரி என்றும், சூலத்தைப் படை யாகக் கொண்டமையாற் சூலி யென்றும், காளிக்குப் பெயர்கள் தோன்றின. போர் வெற்றியும் அவளால் தரப்படுவ தென்று கருதி, அவளைக் கொற்றவை என்றனர். கொற்றம் வெற்றி. அம்மை - அவ்வை - தாய். கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை --கொற்றவை. காளி மாபெரு மறத்தி யாதலால், அவளுக்கு அரிமாவும் விரைந்து பாய்ந்தோடுங் கலைமானும் ஊர்தி யாயின. அவள் மறத்தினாலேயே, அம்மை யென்னும் பெயர் அம்மன் எனத் திரிந்தது. பாலை வாணரான எயினரும் வேட்டுவரும் மறவரும், தமக்கு நில விளச்சவின்மையால், ஆறலைத்தற்கு வழிப்போக்கரை வருவிப்பது காளியரு ளென்று நம்பினர். பாலைநிலத்திற் குரிய வேனிற் காலத்திற் காணுங் கொப்புள நோய், அம்மை யாகிய காளியின் சினத்தால் நேர்வதென்று கருதி, அதற்கு ‘அம்மை' நோய் என்றே பெயரிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/50&oldid=1428903" இலிருந்து மீள்விக்கப்பட்டது