பக்கம்:தமிழர் மதம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் நாக வணக்கத்தார் தாக வுருவைத் தம் தலையுச்சியில் அணிந்திருந்தனர். அவரைச் சிவனியராக்கற்கு, சிவன் முடி மீதும் நாக வுருவிருப்பதாகப் படி மை யமைத்து விட்டனர். அதோடு, சிவன் பாம்புகளையே பல்வேறு அணிகளாக அணிந் திருப்பதாகவும் காட்டி விட்டனர். அதனால், நாகப்பன், பாம் பணியன் முதலிய பெயர்களும் தோன்றின. போம்பலங் காரப் பரன்" (திருக்கோ.கக). தமிழகம் முழுதும் வேந்தராலும் தொழப்பட்ட காளி, சிவன் தேவியாக்கப் பட்டாள். அது திருவாலங்காட்டுத் திருநடப் போரில் அவள் தோல்வி யுற்றதன் விளைவாகக் காட்டப் பட்டது. ஆண்பாற் கேற்ற ஊர்த்த நடனம் பெண்பாற் கேற்காமையால், காளியடியாரும் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய தாயிற்று. சீஅ உவர்- இவர்,உவர்-ஊர். ஊர்தல் - ஏறி நடத்துதல் அல் லது செல்லுதல், உயர்தல். ஊர்-ஊர்த்தம்-வ. ஊர்த்வம் (ürdhva). சிவையுங் காளியும் ஒன்றானதினால், சிவை நீலி (கருப்பி) யெனவும், கானி இறைவி (இறைவன் தேவி) யெனவும், பெயர் பெற்றனர். அம்மை ஐயை என்பன இருவருக்கும் பொதுப் பெயர்கள். அம்மை--அம்மா-வ. அம்பா. காளி சிவன் தேவியான பின், காளியப்பன், பேய்ச்சியப் பன் முதலிய பெயர்கள் சிவனுக்குத் தோன்றின. விண்ணக வாழ்வு நிலையற்றதாய் எழு பிறவியுள் அடங்கின தினாலும், விண்ணக வேந்தனுக்கு மழை பெய்விக்கும் அதி காரமே யிருந்ததனாலும், நிலையான வீட்டுலகத் தலைவனும் எல் லாம் வல்லவனுமான சிவனை வழிபடும் வழிபாட்டுள், வேந்தன் வணக்கம் மறைந் தொழிந்தது. இறுதியில், திருமாலும் பெண்ணாக மாறிச் சிவ பெருமானின் இடப்பாகத் தமர்ந்தான் என்னும் கதை யெழுந்தது. அரி என் னும் திருமால் பெயர் இதனால் தோன்றி விருக்கலாம். அரம்- சிவப்பு. அரன் -சிவன். அரன்-அரி (பெண் பால்) . பச்சை யன் என்னும் பொருள் பிற்காலத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/64&oldid=1428923" இலிருந்து மீள்விக்கப்பட்டது